tag:blogger.com,1999:blog-29803944749386629092023-11-16T12:49:55.851+05:30விசித்திரக்கடவுள்நான் படைப்பதினால் என் பெயர் இறைவன்...கண்ணதாசன்mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-85858575295694200142016-07-28T21:38:00.001+05:302016-07-28T21:41:41.061+05:30நெறிமுறைப்படி நடத்துதல் என்பது என்ன? - What's Ethical Treatment<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்று அமெரிக்காவை சேர்ந்த PeTA (People for Ethical Treatment of Animals) என்கிற அமைப்பு இயற்கைவழி வாழும் நாடுகளில் தங்களது கிளைகளை துவங்கி அவர்களது இயற்கை வழி வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இவர்கள் இயற்கை வழியே உணவு உண்ண வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, பாரம்பரிய உணவு முறைகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் சிலபல வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtgXhgu0rFnXrF8ETHAaMjbsRvaQijTH_9F4oAWSCCv7oCC4O2Jgd16wUjRXH3RBcX9WvSDpUyNzcnpQZO36AtiQevgdr8LvpjSssx3AIE3O32V5vs3XYJ_7MlQfQ_bQ0bxl_b8rKJiNM9/s1600/ethical-seo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtgXhgu0rFnXrF8ETHAaMjbsRvaQijTH_9F4oAWSCCv7oCC4O2Jgd16wUjRXH3RBcX9WvSDpUyNzcnpQZO36AtiQevgdr8LvpjSssx3AIE3O32V5vs3XYJ_7MlQfQ_bQ0bxl_b8rKJiNM9/s1600/ethical-seo.jpg" /></a></div>
<br />
<br />
<br />
அதனால் முதலில் நெறிமுறை என்பதை வரையறுத்த பின்பு தானே இவர்கள் இதனை செயற்படுத்தி இருக்க வேண்டும். இவர்களிடம் நெறிமுறை என்ன என்பதை கேட்டால் உடனே அன்பு என்பதை முன்மொழிவார்கள். அன்பு காட்டவேண்டும் என்பதற்காக இயற்கை உருவாக்கி வைத்திருக்கும் ஒரு நடைமுறையை மாற்ற இவர்கள் யார்?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjtGsTL3vltfvqPE9I89IfHT67986skrSqs48Sca2O-_MjjoZyRyma2wxkdU3tqBxpIg3_SbcU1S49ArIBFLv0h32aPq3_zWYiJhujfNv8EG_oroCvXmR1qeBYQeHUpXvCM3zCQvWQWvVq/s1600/cartoon.tiger.2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="253" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjtGsTL3vltfvqPE9I89IfHT67986skrSqs48Sca2O-_MjjoZyRyma2wxkdU3tqBxpIg3_SbcU1S49ArIBFLv0h32aPq3_zWYiJhujfNv8EG_oroCvXmR1qeBYQeHUpXvCM3zCQvWQWvVq/s320/cartoon.tiger.2.jpg" width="320" /></a></div>
<br />
<br />
முதலில் நெறிமுறை பற்றி பேசும்போது, நாய்களின் நெறிமுறை பற்றி பேசலாம். நாய்களின் நெறிமுறை என்பது வேட்டையாடுவது. அதாவது அது புலால் அல்லது ஊண் உண்ணி. அதனை எப்போது மனிதர்கள் குடியிருப்புகளில் வாழ துவங்கினார்களோ அப்போது தாங்கள் வேட்டையாட உதவியாக இருக்கட்டுமே என்று வீட்டு விலங்காக வளர்க்க துவங்கினார்கள். அப்போதும் அந்த நாய்கள் வீட்டிற்கு வெளியே தான் குடியிருக்கும். வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. முக்கியமாக அதனை கட்டி வைப்பதில்லை. ஏனெனில் நாய்கள் எங்கும் ஓடிப்போய் விடுவதில்லை. எங்கு போனாலும் மீண்டும் தன்னை பராமரிக்கும் நபரின் வீடு தேடி வந்து விடும்.<br />
<br />
மேலும் அதன் கருக்காலத்தில், அதனை சுதந்திரமாக விட்டு விடுவார்கள். பெண் நாய்க்கு தன்னை புணரும் ஆணை தேர்ந்தெடுக்கும் முறை தெரியும். பத்து ஆண் நாய்கள் வந்தாலும் அது எல்லா ஆண் நாய்க்கும் தனது சினைப்பாதையை திறந்து விடுவதில்லை. முதலில் தான் புணரப்படுவதற்கு தயாராக இருக்கிறேன் என்பதன் அடையாளமாக ஒருவிதமான வாசனையை பரப்பிவிடும். அந்த வாசனையை அடையாளம் காணும் ஆண் நாய்கள் அந்த பெண் நாயை புணர தங்களுக்குள் போட்டி போட ஆரம்பிக்கும். போட்டி என்பது வெறுமே ஓட்டப்பந்தயம் மாதிரி அல்ல. உடல் திறன் (சண்டையிடுதல்), ஆளுமைத்திறன் (எவ்வளவு பரப்பளவிற்கு அதனால் வேறு நாய்களை நுழைய விடாமல் செய்ய முடியும்) என்று பல்வேறு தளங்களில் அவை போட்டி போடும். அதில் வெற்றிபெற்று வரும் ஆண் நாய், பெண்ணின் சினைப்பாதையை முகர்ந்து பார்க்கும். அதுவரை தன் வாலால் மறைத்திருந்த பெண்குறியை திறந்து ஆண் நாயை புணர அனுமதிக்கும்.<br />
<br />
இது தான் ஒரு நாயின் நெறிமுறை (Ethics). மனிதர்களுடன் நாய்களுக்கான நெறிமுறை என்னவென்றால், அவை தன்னை பராமரிப்பவரையும் அவர் குடும்பம் சார்ந்தவர்களையும் தொல்லைப்படுத்துவதில்லை. பெரும்பாலும் அவர்கள் பராமரிக்கும் சொத்துக்களின் (ஆடு, மாடு, வயல்வெளிகள்) பாதுகாவலனாகவும் இருக்கும். இது தான் மனிதர்களுக்கும் நாய்களுக்குமான ஒப்பந்தம். பெரும்பாலும் மனிதர்கள் உபயோகிக்கும் ஊணின் மீதங்களை (சமைக்கப்பட்ட ஊண் அல்ல) உண்பதே நாய்களின் உணவு நெறிமுறை. அதிகபட்சமாக புலால் தவிர்த்து பால் அருந்தும் முறை நாய்களிடம் இருந்தது (இது கூட ஒருவகையான திணிப்பு தான்). ஒரு காலகட்டத்தில் சில நாய்கள் தங்களது பராமரிப்பாளரின் வீட்டில் இருக்கும் சாகபட்சிணியான ஆட்டினை கொன்று தின்ன ஆரம்பிக்க, நாய்களை கட்டிவைக்கும் நடைமுறை வந்தது. கட்டி வைப்பதிலும் ஒரு நெறிமுறையை மனிதன் கடைபிடித்தான். கழுத்துடன் சேர்த்து இறுக்கமாக காட்டுவதில்லை. சற்றே தளர்வாக கயிற்றை கழுத்தில் கட்டினார்கள். இதனால் இரண்டு பயன். ஒன்று, நாய் இங்கு அங்கு நகர்ந்தாலும் கழுத்து இழுப்படுவதில்லை. இரண்டாவது, நாய் இரவு வெளித்தங்குவதில்லை.<br />
<br />
ஆனால் காலப்போக்கில் விலங்கினங்களை செல்லப்பிராணிகளாக பார்க்க தொடங்கிய காலத்தில், அதன் உணவு முறை மாற்றப்பட்டது. சமைத்த உணவுகள் பரிமாறப்பட்டன. நாய் வளர்ப்பதற்கு உரிமம் வாங்கும் நடைமுறை வந்தது (ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கீழ்த்தட்டு மக்கள் நாய் வளர்க்கக்கூடாது என்று நினைத்ததால் அவர்கள் உரிமம் வாங்கும் நடைமுறையை கொணர்ந்தார்கள்). உரிமம் வாங்கியவர்களுக்கு செம்பினால் ஆன பட்டயம் கொடுக்கப்பட்டது. அந்த பட்டயத்தை அவர்கள் நாயின் கழுத்தில் கட்டியிருக்க வேண்டும். அவ்வாறு பட்டயம் காட்டப்படும் போது தான் கழுத்தை சுற்றி இறுக்கமாக பட்டை அணிவிக்கும் முறை வந்தது. அவ்வாறு பட்டயம் இல்லாத நாய்களை அரசாங்கம் எடுத்து சென்று விடும்; அல்லது கொன்று விடும். சுதந்திரம் அடைந்த பிறகு கூட இந்த நடைமுறை இங்கு இருந்தது. பிற்காலத்தில் இந்த சட்டம் காற்றில் பறக்கவிடப்பட்டாலும் இந்த சட்டத்தினால் வந்த பழக்கவழக்கங்கள் மாற வில்லை.<br />
<br />
கழுத்தை சுற்றி இறுக்கமான பட்டை அணிவிப்பது, நாய்களை வீட்டு வாசலில் எல்லா நேரமும் காட்டியே வைத்திருப்பது அல்லது பெரிய அடைக்கப்பட்ட கதவிற்குள் சுதந்திரமாக நடமாட விடுவது, மனிதர்கள் உண்ணும் சமைத்த உணவை கொடுப்பது (தற்போது அவற்றிற்கென்று தனியாக தயாரிக்கப்பட்ட உணவை அளிக்கும் நடைமுறை வந்து விட்டது) என்று பல்வேறு பழக்கவழக்கங்கள் வந்து விட்டன. இப்போது செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை எங்காவது கொண்டுபோய் விட்டு வந்தால் அவைகளால் தங்களது பராமரிப்பாளர்கள் வீட்டிற்கு வந்து சேரத்தெரியாது. ஒன்று அவை வாகனத்தில் அடிபட்டு இறந்து விடும் அல்லது நாய்களை பிடித்து பணத்திற்காக விற்கும் யாரிடமாவது சிக்கி வேறு எங்கேனும் விற்கப்படும் அல்லது பட்டினி கிடந்தோ/பிற விலங்குகளால் தாக்கப்பட்டோ இறந்து விடும். அது போக நாய்களின் புணர்வு காலம் வரும்போது இன்று அவை ஒரு கால்நடை மருத்துவரின் துணையுடன் அந்த நாய்க்கு ஏற்ற பெண்/ஆண் தேர்வுசெய்யப்பட்டு ஒரு கட்டுப்பாடான புணர்வு நடைபெறுகிறது. செல்லப்பிராணிகளான நாய்கள் தங்களது இயற்கையான குணங்களில் இருந்து பிறழவைக்கப்பட்டு விட்டன.<br />
<br />
எங்குவேண்டுமானாலும் சுதந்திரமாக சுற்றி விட்டு தன் பராமரிப்பாளரிடம் திரும்பி வந்த வேட்டை விலங்கான நாயை ஒரு பயந்தான்கொள்ளி விலங்காக மாற்றியது தான் இந்த நெறிமுறைப்படி நடப்பவர்களின் சாதனை. இவர்கள் தான் ஜல்லிக்கட்டை காட்டான்களின் விளையாட்டாக காட்ட முயற்சிக்கிறார்கள்.<br />
<br />
ஒருகாலத்தில் வீரமான ஆண்மகனுக்கு தான் மணமுடித்து தருவேன் (வீரனையையே மணப்பேன்) என்று இருந்த திருமண சடங்கானது இன்று அதிகம் சம்பாதிப்பவனுக்கே மணமுடிப்பேன் என்று ஆண்களது வீரத்தை வெறும் மீசையிலும் மஞ்சாசோத்திலும் அடைத்து வீட்டு பிராணியாக மாற்றிவிட்ட இயந்திரவியலின் மற்றொரு பரிணாமம் தான் இன்றைய நெறிமுறைப்படி நடப்பேன் என்று கூவிக்கொண்டிருக்கும் மாற்றம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsvxzlV8SkvsKyT7U457EMtbMh_kc4D-JSJwa8FBPJzYnHvOA0GQIK7Vns7IFmbvgI2O0MoPAhQGU2stHbFrn_34itpEIaVdd48ui5hnfkyUK2G-j-F3Ep02nc_rqf2LzvH3Z7hZrZkztV/s1600/green+and+ethical_508x194.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="122" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsvxzlV8SkvsKyT7U457EMtbMh_kc4D-JSJwa8FBPJzYnHvOA0GQIK7Vns7IFmbvgI2O0MoPAhQGU2stHbFrn_34itpEIaVdd48ui5hnfkyUK2G-j-F3Ep02nc_rqf2LzvH3Z7hZrZkztV/s320/green+and+ethical_508x194.jpg" width="320" /></a></div>
<br />
ஆகவே, நெறிமுறைப்படி நடப்பது என்பது இன்றைய காலத்தில் இயற்கைக்கு மாறாக மாற்றிக்கொள்வது என்பதாகி விட்டது. மனித இனம் தனது வருங்கால சந்ததியினருக்கு பேராபத்து நடக்குமுன் தன்னை மாற்றிக்கொள்வது என்பதே இப்போதைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.<br />
<br />
<br />
வருத்தத்துடன்,<br />
<br />
கடவுள்<br />
---<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinRJ0YByB1k3pcanOwNeJv-5sU343gsiSVELypKmsqVEVHlwjiB9DRG8UcKlQ-WSHcdnFliT_no6iHk4l7IIW3POxaiUzGeB4WnKQCTKc3OEJii1YWTWccIa0McXE8_zfFM9tpCi2kiNie/s1600/keepcalmsavelivestock.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinRJ0YByB1k3pcanOwNeJv-5sU343gsiSVELypKmsqVEVHlwjiB9DRG8UcKlQ-WSHcdnFliT_no6iHk4l7IIW3POxaiUzGeB4WnKQCTKc3OEJii1YWTWccIa0McXE8_zfFM9tpCi2kiNie/s320/keepcalmsavelivestock.JPG" width="227" /></a></div>
<br />
The ones talking about the ethical treatment never defined what is ethical treatment. They simply say kindness is ethical. Will kindness only the ethics?<br />
<br />
These people say they treat the animals in ethical (kind) way. The ethics for dogs is hunting and eating meat. Maximum the human trained the dogs to drink milk. When it was domesticated, the dogs were used in hunting and later to protect the properties of it's keeper - cattle and the farm land. Then too they were fed with the left out meat. The ethics the dogs show with the human is to protect not only their properties but to bond with the family members of the keeper and protect them.<br />
<br />
Another ethics of the dogs of their mating method. The female once ovulating, spreads an aroma that dogs only can understand. Once the female sent out the invitation with this aroma, the compatible dogs competes to mate with that female. The female evaluates the capable male by seeing it's physical and leadership capability. The winner in the fight and the leader who makes the other dogs surrender or run away can go near the female. For that male, the female opens her vagina and the mating happens.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi50Yj8neQZanQ2aFCOcCf5v4VIZpe0sAiO2lXHwS20Y8zOv0pviNshOwV_gAbkO45p6rdG9qiVHEScVHgBuFMgVikMyYRN02UkUzyXTLSdj_YiORr0JJ-zs6gOk9jwV2vKdYhaz5NSMAAZ/s1600/resized_business-dog-meme-generator-business-dog-says-ethics-are-important-66c74f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi50Yj8neQZanQ2aFCOcCf5v4VIZpe0sAiO2lXHwS20Y8zOv0pviNshOwV_gAbkO45p6rdG9qiVHEScVHgBuFMgVikMyYRN02UkUzyXTLSdj_YiORr0JJ-zs6gOk9jwV2vKdYhaz5NSMAAZ/s320/resized_business-dog-meme-generator-business-dog-says-ethics-are-important-66c74f.jpg" width="320" /></a></div>
<br />
<br />
In later stages, the dogs started to kill the cattle for their over hunger, the human started to tie them in the pole outside the cattle den. Then too the rope is not tied tightly. It was tied loose so that the dog won't get hurt and it cannot run away/escape from the rope. This way the bonding was not broken.<br />
<br />
When the British ruled India, they brought their pet dogs and seen even the lower income people in India too pet the dogs. So they brought the licensing system which can be adopted only by rich people. They issued a copper token with the license number that should be tied around the dog's neck. To tie the token, they brought tight belts, bands and they chained the dogs too. Even after independence too the licensing system was there but as usual, the system is phased out by unethical practices.<br />
<br />
Even after the licensing practices are away now, the practices of chaining the dog, tying the dogs with the belts and bands, feeding them the cooked food didn't fade away. Now in the latest evolution, the people started to feed them with the processed food.<br />
<br />
The pedigree dogs are nowadays treated like slaves. The natural behavior of dog that roams around the city but comes back to the keeper's house at night is gone. The dogs are mostly tied/chained inside the house or they were just roam freely inside a gated house. If you let the pedigree dogs, they cannot comeback to their keeper's house. They either killed by the vehicles plying on the roads or rogue animals or they were caught and sold to some new keeper. Their mating too is now happening with the help of a vet inside 4 walls that is controlled by the vet than the mating ready partner.<br />
<br />
The achievement of the so called animal lovers and so called "Ethical treating" people, the dogs already had their disorder in their natural habits. Even in human race too earlier the mating happened with a right brave and courageous male. There were games played to find the brave male for the female. Later when the industrialization happened, the high earning male is termed as a right mate and the bravery of the men now just lives only in their mustaches and the chest hair.<br />
<br />
So now behaving or treating ethical is a thing that turned into against the nature. The human race which have the thinking capability should change themselves before any disaster happens.<br />
<br />
<br />
Sadly,<br />
<br />
The God</div>
mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-30580939662846855592016-07-21T21:53:00.001+05:302016-07-21T22:03:51.801+05:30அறிய மறந்த கதை - பட்டத்து யானை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாம சின்ன வயசுல கோயிலுக்கு போய் யானை பார்த்திருப்போம். அப்புறம் சர்க்கஸ்ல யானை மிதிவண்டி ஒட்டி, சின்ன ஸ்டூல்ல எல்லா காலையும் வைச்சு ஏறி நின்னதை, மேலும் பல சாகசங்கள் பண்ணதை பார்த்திருப்போம்.<br />
<br />
இங்க இருக்க நிறைய பேருக்கு யானையை பற்றி நிறைய தெரிஞ்சிருக்கும்.
சிலருக்கு கொஞ்சமாக தெரிஞ்சிருக்கும். உதாரணமா யானை வேகமா ஓடக்கூடிய ஒரு பிராணி என்பது நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்காது. ஆனா நாம இப்போ பேசப்போறது இப்படி
நிறையவோ-குறையவோ தெரிஞ்சிருக்கிற விஷயத்தை பத்தி இல்லை...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnSgf2jd63djkfJ_YXGUCIpYi2P_yEjD0X1AOK4v86wvWU8kTWSP1Yw_zBGSrT1TyAcbcYqGnU8x2KsTsfxaXRGWt4QHWRx6XXipFqMlbI_ju5_adjpcPs8u44-TMOjEf9axXl_lhjEwAz/s1600/elephants_round_up.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnSgf2jd63djkfJ_YXGUCIpYi2P_yEjD0X1AOK4v86wvWU8kTWSP1Yw_zBGSrT1TyAcbcYqGnU8x2KsTsfxaXRGWt4QHWRx6XXipFqMlbI_ju5_adjpcPs8u44-TMOjEf9axXl_lhjEwAz/s320/elephants_round_up.jpg" width="320" /></a></div>
<br />
முதல்ல யானையை பற்றி ஆரம்பிக்கும் முன்னாடி, நாம சின்னவயசுல பார்த்த சாமி படமோ அல்லது ராஜாக்கள் பற்றிய படமோ உங்களுக்கு ஞாபகப்படுத்த முடிஞ்சா உங்க மனக்கண் முன்னால கொண்டுவந்து நிறுத்துங்க. ஒரு ராஜா செத்துப்போயிட்டார்னா உடனே மந்திரி/ராஜகுரு சொல்லுவார் - "பட்டடத்து யானைகிட்ட மாலையை கொடுத்து விடுங்கள். அது யார் கழுத்தில் மாலையை இடுகிறாரோ அவரே அடுத்த அரசர்." இதனை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி சிரமப்படவேண்டாம் என்று நினைப்பவர்கள் இங்கு கொடுத்திருக்கும் சரஸ்வதி சபதம் <a href="https://www.youtube.com/watch?v=aqyHnzx5qgo">பட</a> இணைப்பை பயன்படுத்தி பார்த்துக்கொள்ளுங்கள்.<br />
<br />
இதுல பார்த்தீங்கன்னா ஒரு யானை சாதுவாக தெருவில் வரும். அதனைக்கண்டு எல்லோருக்கும் பயந்து ஓடுவார்கள். ஆனால் அந்த யானை வந்து மாலை இடும். இது எந்த அளவுக்கு டூபாக்கூர்ன்னு யோசிங்க. நீங்க கோயிலுக்கு போகும்போது யானை பக்கத்துல போய் பயந்து தொட்டு கும்புட்டு வர்ற மாதிரி.<br />
<br />
அப்புறம் எந்த படத்துல பார்த்தீங்கன்னாலும் ராஜா கோவிலுக்கு போகும்போது (குடும்பத்தோடவோ தனியாக மந்திரி பரிவாரங்களோடவோ) யானையில போக மாட்டார். பார்க்கிங் பிரச்சினை எல்லாம் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக ஒரு ரதம்/தேரில் தான் போவார்(கள்). ஏன்னா அந்த காலத்து தேர்கள் எல்லாம் சில பல பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும். ஏதேனும் திருட்டுத்தனமான கொலை முயற்சி நடந்தாலும் ராஜாவும் அவரது குடும்பத்தினரும் சுலபமாக தப்பிக்க முடியும்.<br />
<br />
சரி சரி. தெரியுது. பட்டத்து யானையை பத்தி பேசுறேன்னு சொல்லிட்டு, சும்மா சினிமாவை வச்சு ஏதோ பினாத்திக்கிட்டு இருக்கேன்னு நீங்க திட்டுறது தெரியுது. இப்போ நேரடியா விசயத்துக்கு வந்துடுறேன்.<br />
<br />
அதாகப்பட்டது, பட்டத்து யானை என்பது நாமெல்லாம் நினைக்கிறது மாதிரி ஒரு சாதுவான பிராணி கிடையாது. அந்த யானையில் தான் அரசர் போருக்கு செல்லுவார். அந்த யானை ஒரு மரண எந்திரம் (killing machine). யாரு அதுக்கு முன்னாடி போய் நின்னாலும் ஒன்னு தூக்கி எறிஞ்சுடும்; இல்லாட்டி காலுக்கடியில் போட்டு தக்காளி சட்னி ஆக்கிடும். இதுக்கு உதாரணம் <a href="https://www.youtube.com/watch?v=q1uhAz9_v9A">இங்கே</a>. பட்டத்து யானைகள் இந்த தரவில் காண்பிப்பது போல பெருசா இருக்காது. ஆனால் இந்த யானைகள் என்னென்ன அட்டூழியம் பண்ணுதோ அத்தனையும் பண்ணும். இந்த யானைகளை கட்டுப்படுத்தக்கூடிய இருவர் - அந்த ராஜா மற்றும் அந்த பாகன். இவர்கள் மட்டுமே அந்த யானையை கட்டுப்படுத்தக்கூடிய சங்கேத வார்த்தைகள் அல்லது செயல்களை அறிந்தவர்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi19QJgOVo3Ml0bOkjKN4MPMXbGqHPZ1RJoCWL4deqsMndQrdf6PqBkNDoH7SUggPMBQSyPGdkMVZiAwgAmeWxRjJBabG7P6w3cdMYWoAQMkJrorQJPvonCCKfj1Dnowp7NSLtUfb5xmE3p/s1600/61.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi19QJgOVo3Ml0bOkjKN4MPMXbGqHPZ1RJoCWL4deqsMndQrdf6PqBkNDoH7SUggPMBQSyPGdkMVZiAwgAmeWxRjJBabG7P6w3cdMYWoAQMkJrorQJPvonCCKfj1Dnowp7NSLtUfb5xmE3p/s320/61.jpg" width="320" /></a></div>
<br />
அப்புறம் எப்படித்தான் நம்ம வரலாற்று நூல்களில் யானை (தும்பிக்)கையில் மாலையை கொடுத்து புது அரசரை தேர்ந்தெடுத்ததாக குறிப்புகள் இருக்கின்றனன்னு நீங்கள் கேட்பது தெரிகிறது. அதாகப்பட்டது அவர்கள் யானை தும்பிக்கையில் மாலையை கொடுத்து அனுப்புவதில்லை. ஒரு மாலையானது யானையின் தும்பிக்கையில் மேற்புறத்தில், அதாவது நெற்றியில் கட்டி வைத்திருப்பார்கள். அது கீழே விழாதவாறு கட்டியிருப்பார்கள். அந்த யானையை ஊருக்குள் ஒரு நாள் அவிழ்த்து விடுவார்கள். அந்த யானையை யார் கட்டுக்குள் கொண்டு வருகிறார்களோ அவர்களே அடுத்த அரசர்.<br />
<br />
அப்போ அந்த யானையை கட்டுப்படுத்தும் பாகனின் குடும்பத்தினர் சுலபமாக அரசராகி விடமுடியுமேன்னு நீங்க கேக்கலாம். அது அவ்வளவு சுலபமில்லை. அந்த பாகன் அரண்மனை யானை கொட்டடியில் தான் குடும்பத்த்தோடு தங்கி இருப்பார்.வாரிசு இல்லாமல் அரசர் இறந்து மந்திரியும் ராஜகுருவும் "யானை கையில் பூமாலை" என்று முடிவெடுத்த வேளையில் அந்த பாகன் குடும்பத்தோடு உலகத்தின் பார்வையில் இருந்து காணாமல் போய் விடுவார். அதாவது ஒரு ரகசிய இடத்தில் அவரது குடும்பம் பாதுகாக்கப்படும். அவர்களுக்கு உணவு வேளாவேளைக்கு வரும். அவர்களால் வெளி உலகத்தில் யாரையும் தொடர்பு கொள்ள இயலாது. அவ்வளவு பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.<br />
<br />
யானையை அவிழ்த்து விடவேண்டிய நாளில் பாகன் மட்டும் அங்கிருந்து வெளியே அழைத்து செல்லப்படுவார். அவர் யானையை அவிழ்த்து விட்டு விடுவார். யானை ஊரைவிட்டு ஓடி விடமுடியாதபடி ஊர் எல்லையை மூடிவிடுவார்கள் (இங்கு ஊர் என்பதை நாடு என்பதாக அறியவும்). ஒரு ஆள் உள்ளே வரக்கூடிய வகையில் ஒரு கதவு மட்டும் திறந்திருக்கும். அந்த வழியே யாரும் உள்ளே வரலாம்; வெளியே போகலாம். அது போக போருக்கு தயாராக படையும் தயாராக இருக்கும். ஏனெனில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிரி படையெடுத்து வந்தால் சமாளிக்க வேண்டியிருக்குமல்லவா? இப்போ யானை கொலைவெறியுடன் ஊரை சுற்றி சுற்றி வரும். கண்முன் கண்டதை எல்லாம் பிடுங்கி எறியும். ஏற்கனவே ஊருக்குள் தண்டோரா போட்டு சொல்லியிருப்பார்களாதலால் சாமான்ய மக்கள் யாரும் தெருவில் நடமாட மாட்டார்கள்.<br />
<br />
அந்த யானையை அடக்க முடியும்னு தொடை தட்டுகிறவர்கள் எல்லாம் களத்தில் இருப்பார்கள். ஆண்-பெண் வித்தியாசமெல்லாம் அங்கே பார்க்க மாட்டார்கள். யாருக்கு துணிச்சலும் திறமையும் இருக்கிறதோ அவர்கள் இறங்கி விளையாடவேண்டியது தான். ஒரே நிபந்தனை மட்டுமே. யானைக்கு மரணத்தை தரக்கூடிய அளவுக்கு காயப்படுத்தக்கூடாது. ஏன்னா அந்த யானை தான் அடுத்த அரசருக்கும் பட்டத்து யானையாக செயல்படும். அதனால் அது உயிரோடு இருக்க வேண்டியது அவசியம். இப்போ எல்லாரும் களமாடுவார்கள். யார் அந்த யானையை கட்டுப்படுத்தி அதன் மீது அமர்ந்து அதன் நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் மாலையை எடுத்து சூடுகிறாரோ அவரே அடுத்த அரசராக அறிவிக்கப்படுவார். அப்படி அறிவிக்கப்பட்டவுடன் பாகனது குடும்பம் விடுவிக்கப்படும். சங்கேத சொற்களும் மாற்றப்பட்டு விடும்.<br />
<br />
இது தாங்க அந்த பட்டத்து யானையோட கதை. கிட்டத்தட்ட இப்படிப்பட்ட ஒரு கதையை நீங்கள் சிவகாமியின் சபதம் படித்திருந்தால் தெரிந்திருப்பீர்கள் (பரஞ்சோதியின் கதை). நாமெல்லாம் இதனை சிறுவயதிலேயே நமக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் போது கேட்டிருந்தால் இப்போ எங்கேயோ போயிருப்போம்.<br />
<br />
A brief description of the above script:<br />
<br />
In our childhood we would have heard stories of "electing a king through an elephant garlanding a man/woman" (movies like Saraswathi Sabatham depicts this). But many doesn't ask whether the king's elephant is that calm? Really a king's elephant should be mad (LOTR have a scene how mad the king's elephants are; links given above) as it is a killing machine in the war zone. So whether the epics or stories written about this electoral method is wrong?<br />
<br />
No. The real election method is that the chief minister and the chief advisor of the king ties a garland in the elephant's forehead. The one who wins the mad elephant without killing it and taking the garland wins and elected as king. While the electoral process is announced, the family members of that elephant's charmer and his family will be taken away from the town and on the election day the elephant charmer only is taken to the town to unleash the elephant.<br />
<br />
The elephant charmer and his family is taken away because they should not participate in the election. This is because the elephant charmer is the one of the two persons (other than the king) who knows the ciphers and signals that controls the elephant. The city walls will be closed with only a small gate is open for anyone (as a single person) to enter or exit the city. There will be an army at standby as there will be a chance of war from enemies.<br />
<br />
The people will be well informed about the election and so the one's who wants to participate in the election only will be out on the streets to charm and control the elephant. There is no control on the gender of contestant (even females can participate). Once the winner is announced, the ciphers and signals will immediately be changed.<br />
<br />
And we believed these many days that the king's elephant carries a garland to elect right person to be the next king these many days. ROTFL.<br />
<br />
அன்புடன்,<br />
<br />
கடவுள்</div>
mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-48393658308249166172015-12-30T17:05:00.003+05:302016-01-05T10:46:33.495+05:30சென்னை வெள்ளம் - கற்றது என்ன - பாகம் - 3 - அக்கம்பக்கம் பாக்கணும் சின்னராசா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்று சிங்கார சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; ஆற்றங்கரையிலும், முகத்துவாரத்திலும், ஏரியிலும் கட்டிய வீடுகளை இடிக்கவேண்டும் என்று கூவுபவர்களை நன்றாக கவனித்தால் அவர்களில் பெரும்பாலோனோர் சென்னைவாசிகளே கிடையாது.<br />
<br />
ஒரு மனிதனுக்கு மண்ணுடன் இரண்டு வகையில் தொடர்பு உண்டு. அது சமூக மற்றும் பொருளாதார தொடர்பு. சென்னையில் இன்று அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொருளாதார தொடர்பு கொண்டவர்களே. சமூக தொடர்பு என்பது சொந்தங்களும் சுற்றங்களும் அடங்கிய ஒன்று. பொருளாதார தொடர்பு என்பது அவர்கள் செய்யும் வேலை அல்லது வியாபாரத்தை சேர்ந்த ஒன்று.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-5m_7OdE_p01Rf5FRfPKi1cxFv77AEzu2Y_wQiPTsKlMR0Z4MFGMwQCZieMZTYWnT2qrFuzle533bl5lIcG5eLedcsh0E-Gt0V_JKpPS3195OIAF9BQTj34qRpO-Pd4m57T3q0H7eQmhC/s1600/qqxsgEncroachment.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="231" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-5m_7OdE_p01Rf5FRfPKi1cxFv77AEzu2Y_wQiPTsKlMR0Z4MFGMwQCZieMZTYWnT2qrFuzle533bl5lIcG5eLedcsh0E-Gt0V_JKpPS3195OIAF9BQTj34qRpO-Pd4m57T3q0H7eQmhC/s320/qqxsgEncroachment.gif" width="320" /></a></div>
<br />
<br />
90-களின் மத்தியில், கணினித்துறை வளர்ச்சி அடைய ஆரம்பித்த போது, பலர் வேலைவாய்ப்பு அதிகம் இருந்த சென்னையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள். இந்த காலகட்டத்தில் தான் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும் காலூன்ற ஆரம்பித்தன. மக்கள் தங்களுக்கு என்னவிதமான பணி செய்ய இயலும் என்று யோசித்ததை விட எந்த வகையில் குறைந்த உடலுழைப்பில் அதிக சம்பாத்தியம் பெற இயலும் என்பதை ஆராய ஆரம்பித்தார்கள். இதற்கான காரணம் நம் பெற்றோர் காலத்தில் வளர்ச்சியடைந்திருந்த அரசுத்துறை பணிகள்.<br />
<br />
என் மகன் நன்றாக படித்து உட்கார்ந்து செய்யும் வேலைக்கு செல்லவேண்டும் என்று நினைத்தார்களே தவிர்த்து அதனால் வரும் பின்விளைவுகளை பற்றி யோசிக்கவில்லை. விவசாயம் என்கிற கைக்கும் வாய்க்கும் மட்டுமே வருமானம் தரும் தொழிலை விட பிறரை ஏவி உட்கார்ந்து பார்க்கும் வேலைக்கு தான் மதிப்பு அதிகம் என்பதாக சற்று கற்பனை செய்துகொண்டார்கள். அதன் விளைவு தான் இன்று பெரும்பாலான விவசாய நிலங்களும் ஏரிகளும் ஆறுகளும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.<br />
<br />
இவ்வாறாக ஒருபுறம் படிப்பு மூலமாக மண்ணுக்கு தேவையான விசயங்களை குழி தோண்டி புதைத்தோமேன்றால் மறுபுறம் வேலையில்லா நிலையையும் உருவாக்கினோம். எப்படி? விவசாயம் மட்டுமே தெரிந்த ஒரு இடைப்பட்ட தலைமுறைக்கு பெரிதாக வேலையில்லாமல் செய்து விட்டோம். பலர் விவசாயத்தில் அதிகம் பணம் சம்பாதிக்க முடியாத காரணத்தினால் நகரத்தில் குடியேறுகின்ற படித்த முட்டாள்களுக்கு (இந்த முட்டாள்கூட்டத்தில் நானும் ஒருவன்; ஆனால் முட்டாளாக மாற்றப்பட்டேன் என்பதுதான் உண்மை) வேலை செய்ய நகரத்தினை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.<br />
<br />
இவ்வாறாக நகரத்திற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கும் ஒரு ஆசை. தன்னுடைய அடுத்த தலைமுறை தன்னைப்போல யாரிடமும் கைகட்டி வேலை செய்யக்கூடாது என்று. ஆனால் தங்கள் பிள்ளைகள் நன்கு படித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்து அங்கும் கைகட்டி அடிமை வேலை தான் செய்யப்போகிறார்கள் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரே வித்தியாசம் அன்று உடலுழைப்பு; இன்று மூளையை கசக்கிபிழியும் வேலை. அதனால் இவர்கள் நல்ல பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்காக தங்கள் தேவைகளை குறைத்துக்கொண்டார்கள். அதுபோக அவர்கள் செய்த ஒரு செயல் இன்றைக்கு தங்கள் சொந்தங்களே தங்களை மீண்டும் புலம்பெயர சொல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.<br />
<br />
பொதுவாக ஒரு இடத்தில் வேலை செய்கின்றவர்கள் குடியிருக்கவென்று ஒரு பாகம் எல்லா இடங்களிலும் இருக்கும். அன்றைய காலத்தில் கிராமங்களில் இருந்தமுறையை பார்த்தால் மிகவும் பள்ளமான இடத்தில் நீர்நிலைகள் - ஏரி, கண்மாய், ஊருணி - அமைந்திருக்கும். அதற்கடுத்த நிலையில் விவசாய நிலங்கள் இருந்திருக்கும். அதற்குபின்னே கால்நடை தொழுவங்கள் அமைந்திருக்கும். இந்த பகுதியில் தான் கிணறுகளும் அமைந்திருக்கும். அதை தாண்டி கோயிலும் கொடியிருப்புகளும் நிறைந்திருக்கும். யாரும் தாங்கள் வேலைசெய்யும் வயலை மிக ஒட்டி குடியிருக்கமாட்டார்கள். ஆனால் நகரத்திற்கு பெயர்ந்து சென்ற மக்கள் தாங்கள் வேலைசெய்யும் பகுதிக்கு அருகில் குடியிருந்தால் போக்குவரத்து செலவுகளை சமாளிக்கலாம் என்று நினைக்க தொடங்கினார்கள்.<br />
<br />
அவர்களுக்கு இருந்த பிரச்சினை வாடகை செலுத்துவது. ஏற்கனவே நன்கு சம்பாதிப்பவர்கள் குடியிருக்கும் பகுதியென்பதால் வாடகை அதிகம் இருக்கும். அதனை சமாளிக்க அரசு கண்டுகொள்ளாத நிலங்களை தங்கள் இருப்பிடமாக மாற்ற ஆரம்பித்தார்கள். அதாவது ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தார்கள். எந்த நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தார்களோ அந்த நோக்கம் காலப்போக்கில் மாற ஆரம்பித்தது. இந்த நிலம் அரசு உபயோகப்படுத்தவில்லை. வேறு யாரும் சொந்தம்கொண்டாட வரவில்லை. அப்படியெனில் இதில் குடியிருக்கும் எனக்கே ஏன் இந்த அரசு இந்த நிலத்தை பட்டாபோட்டு கொடுக்கக்கூடாது என்று அரசை கேள்விகேட்க ஆரம்பித்தார்கள். இந்தகட்டத்தில் அதிகார போதையில் இருந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு அதிகாரத்திற்கு வர இவர்கள் தான் வாக்களிக்க வேண்டும் என்பதால் இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆரம்பித்தார்கள்.<br />
<br />
இவ்வாறாக ஆக்கிரமிக்க தொடங்கிய மக்களில் சற்றே வலுத்தவர்கள், நகரத்தில் வேறெங்கெல்லாம் இப்படிப்பட்ட நிலங்கள் இருக்கின்றன என்று சோதித்து வேறுவகையில் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தார்கள். இவர்கள் பின்னாளில் பெரிய ரவுடியாகவும் ஒருகட்டத்தில் அரசியல்வாதிகளாகவும் வளர ஆரம்பித்தார்கள். இவ்வாறு வளர்ந்தவர்கள் நாங்கள் இல்லாவிடில் நீங்கள் இல்லை என்கிற மாதிரியான ஒரு மாய தோற்றத்தை மக்களின் மனதில் விதைக்க தொடங்கினார்கள். தாங்கள் இருக்கும் பகுதிகளில் செல்வம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான தொழிற்சாலைகளை தாங்கள் இருக்கின்ற பகுதியில் இருக்கும்படி பார்த்துகொண்டார்கள்.<br />
<br />
இப்படி தொழிற்சாலைகள் பெருக்கெடுக்க பெருக்கெடுக்க, மக்கள் புலம்பெயர்வது அதிகமானது. ஆனால் அவர்களுக்கு வாழ வீடுகட்ட நிலம்? நிலம் கிடைக்காதவர்கள் தங்களது நீர்தேவைகளுக்காக ஆற்றங்கரையில் குடிசை போட ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நீரை மாசுபடுத்த ஆரம்பித்தார்கள். அவர்களது பிள்ளைகள் நன்றாக சம்பாதிக்க ஆரம்பிக்கையில் பெரிய வீடுகளில் குடியேற வேண்டிய கட்டாயத்திற்கு வரும்போது வீடு கட்ட நிலங்கள் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் பணபோதை; மறுபக்கம் பதவிபோதை. இரண்டும் சேரும்போது இயற்கையால் எதிர்க்க முடியவில்லை. இருந்த ஏரிகளை மண்கொண்டு மூடினார்கள். கால்வாய்களையும் ஆறுகளையும் தூர்ந்துபோக செய்தார்கள். இயற்கையை வன்புணர்வு செய்து கட்டிடங்களை எழுப்பினார்கள். ஆயினும் அவர்களது போதை இறங்கவில்லை.<br />
<br />
இன்னும் இன்னும் என்று தேடியபோது, பக்கத்து மாவட்டங்களும் இந்த வன்புணர்வுக்கு ஆளாகின. ஒருபக்கம் விளைநிலங்கள் கட்டிடங்களாகின. மறுபுறம் விவசாயம் செய்ய ஆட்கள் கிடைக்காமல் நிலங்கள் தங்கள் பச்சையாடையை இழக்கதொடங்கி விட்டது. இன்று திருச்சி, தஞ்சை பகுதிகளில் விவசாயம் நடந்தாலும் அது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த விவசாயத்தில் மூன்றில் ஒருபங்கே. மாடுகட்டி போரடித்தால் மாளாதென்று ஆணைகட்டி போரடித்த தஞ்சைக்கே இந்த நிலையென்றால், நெல்லை சீமையைப்பற்றி கேட்கவேண்டுமா? அங்கும் விவசாயம் கொஞ்சம்கொஞ்சமாக அழியதொடங்கிவிட்டது. அதன் ஒரு கோர விளைவு தான் தாமிரபரணி ஆற்றில் தங்குத்டையின்றி நீரெடுக்க பன்னாட்டு குளிர்பான நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது.<br />
<br />
அவர்கள் எடுக்கப்போவது நீரை அல்ல. உங்களது இரத்தத்தை. விழித்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் நாளை நாம் நம் சிறுநீரை சுத்தப்படுத்தி குடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம்.<br />
<br />
அன்புடன்,<br />
<br />
கடவுள்</div>
mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-83106880252979198172015-12-16T11:58:00.000+05:302016-01-05T10:46:50.879+05:30சென்னை வெள்ளம் - கற்றது என்ன - பாகம் - 2: மாற்றம் ஒன்றே மாறாதது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முந்தைய பதிவில் நானறிந்த சென்னையை பற்றி எழுதி இருந்தேன். இப்போதும் அதையே தொடரப்போகிறேன். ஆனால் சற்று முன்னோக்கி வந்து, நான் மீண்டும் சென்னைக்கு 2007-ல் வந்தபோது பார்த்தவற்றைப்பற்றி.<br />
<div>
<br /></div>
<div>
அதற்கு முன்னாள் சில கேள்விகள்: உங்களில் எத்தனை பேர் சென்னை நகரத்திற்குள் வயல்வெளிகளை பார்த்திருக்கிறீர்கள்? உங்களில் எத்துனை பேர் இன்றைய சென்னையின் பரப்பளவிற்குள் தோப்புகளையும் கானகத்தையும் (கிண்டி தேசிய பூங்கா தவிர்த்து) பார்த்திருக்கிறீர்கள்? நான் பார்த்திருக்கிறேன். </div>
<div>
<br /></div>
<div>
போரூர் பகுதியில் இன்று பணம் அறுவடை செய்யும் கான்கிரீட் கானகங்கள் இருக்கும் பகுதியில் விவசாயம் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். கிண்டியில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கு வரும் வழியிலும், வேளச்சேரி பகுதிகளிலும் நான் தோப்புகளை பார்த்திருக்கிறேன். தரமணி சாலையில் நான் அடர்ந்த (சிறிய) காட்டினை நான் பார்த்திருக்கிறேன்.</div>
<div>
<br /></div>
<div>
சென்னையின் போக்குவரத்து அடர்த்தியான பகுதியாக கூறவேண்டி உங்களை கேட்டால் எந்த பகுதியை சொல்லுவீர்கள்? மத்திய கைலாஷ்? கிண்டி? சோழங்கநல்லூர்? மத்திய ரயில் நிலையம்? இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்தால், நீங்கள் சென்னைக்கு புதியவர்... கடந்த 15 ஆண்டுகளுக்குள் நீங்கள் சென்னையில் குடியேறியவர் என்று அர்த்தம். சென்னையின் போக்குவரத்து அடர்ந்த பகுதி பாரிமுனை. அதற்கடுத்து கூறவேண்டுமெனில் தாம்பரம்தொடர்வண்டி நிலையம். கோயம்பேடு பேருந்து நிலையம் வருமுன், பாரிமுனையில் இருந்து தான் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.</div>
<div>
<br /></div>
<div>
ஒருபக்கம் பேருந்து ஏற வருபவர்களால் கூட்டம் எனில், மறுபுறம், நீதிமன்றத்திற்கு வருபவர்கள், ஷாப்பிங் செய்ய வருபவர்கள் என்று எப்போதும் கசகசவென்று இருந்த பகுதி அது. அடுத்ததாக தாம்பரம் ரயில் நிலையம். 10 வருடங்களுக்கு முன், இது சற்றே குறுகலான பகுதி. GST சாலையில், தெற்கு நோக்கி பயணம் செய்யவேண்டுமெனில் கிண்டி பகுதியிலுருந்தோ , கே.கே. நகரிலிருந்தோ, பல்லாவரம், பரங்கிமலை முதல் தாம்பரம் வரையில் வசிப்பவர்களுக்கு பேருந்து ஏற மிக அருகில் இருக்கும் பகுதி, தாம்பரம் தொடர்வண்டி நிலைய வாசல் தான். அதுபோக, எழும்பூரில் இருந்து கிளம்பும் தொடர் வண்டிகள் அடுத்ததாக நிறுத்தப்படும் பெரிய நிலையம் தாம்பரம் தொடர்வண்டி நிலையம் தான். ஆக இந்த பகுதியும் கசகச...</div>
<div>
<br /></div>
<div>
இதுபோக இன்னொரு கேள்வி. உங்களில் யாராவது 3-நட்சத்திர+ அந்தஸ்தில் என்றாவது Pantry car-ஐ தென்னகத்தில் ஓடும் தொடர்வண்டியில் பார்த்தது உண்டா? நான் பார்த்திருக்கறேன். மீட்டர் காஜ் வண்டியாக ஓடிக்கொண்டிருந்த காலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் Pantry car அவ்வளவு சிறப்பாக இருந்தது. இன்று எந்த தொடர்வண்டியிலாவது குறைந்தபட்சம் சுத்தமாக அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவில் ஒரு Pantry car பார்க்க முடியுமா? (வெளிநாட்டு யாத்திரிகர்களுக்காகவும், பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யும் வகையில் இருக்கும் சில தொடர்வண்டிகள் தவிர்த்து, தினசரி இயக்கப்படும் ஏதாவது ஒரு தொடர்வண்டியில் நல்லதாய் ஒரு Pantry car காண்பிக்க வேண்டும்).</div>
<div>
<br /></div>
<div>
ஆகா நாம் மாற்றம் என்ற பெயரில் நன்றாக இருந்த பலவற்றை இழந்து விட்டோம் என்றே கூறவேண்டும். இன்றைய சென்னையில் கான்கிரீட் காடுகளும், மனித மரங்களும் தாவரங்களை விட அதிகமாக இருக்கின்றன. நாம் வளர்ச்சி என்ற பெயரில் நம் தேவைகளை அழித்துவிட்டு, ஆசைகளையும், கனவுகளையும் அடைய வாழ்க்கையை தொலைத்து விட்டு அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம்.</div>
<div>
<br /></div>
<div>
சரி. இதற்கும், சென்னை வெள்ளத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது காதில் விழுகிறது. அந்த கேள்விக்கான பதில் விரையில் வரும் அடுத்த பதிவில்.</div>
<div>
<br /></div>
<div>
-<b><span style="color: #0b5394;">கடவுள்</span></b> </div>
</div>
mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-51041130615117849772015-12-11T12:27:00.001+05:302016-01-05T10:47:06.671+05:30சென்னை வெள்ளம் - கற்றது என்ன? - பாகம்-1 - நானறிந்த சென்னை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்னையில் வந்த வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க மாநில அரசு கோரிக்கை வைத்த இந்த நேரத்தில் இது நிச்சயமான பேரிடரா என்பதை அலச வேண்டிய நேரமாக நான் கருதுகிறேன்.<br />
<br />
எனக்கு சென்னையில் உறவினர்கள் இருந்தாலும் எனக்கும் சென்னைக்கும் ஒரு வருசத்திற்கு சற்றே அதிகமான வருட உறவே உண்டு. ஆனால் நானறிந்த சென்னைக்கும் இன்றைய சென்னைக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வித்தியாசம் உண்டு.<br />
<br />
90களின் ஆரம்பத்தில் நான் சென்னை வந்த போது தான் முதல்முறையாக நீண்ட பயணமாக வி.ஜி.பி. பொழுதுபோக்கு பூங்காவிற்கு முதல் முதலாக சென்று வந்தேன். அந்த பாதையில் வி.ஜி.பி.க்கு முன் வேறேதும் பெரிய அளவிலான கட்டடங்கள் இருந்ததில்லை.<br />
<br />
மகாபலிபுரம் செல்லும் பாதையில் முட்டுக்காடு வரும். அந்த இடம் சவுக்குதோப்புகளுக்கு பிரபலம். ஒரு காலத்தில் அந்தப்பகுதி சமூகவிரோதிகளின் புகலிடமாகவும் இருந்தது. நிறைய கற்பழிப்புகள், கொலைகள் கண்ட இடம் அந்தப்பகுதி. இன்னிக்கு பாத்தீங்கன்னா அங்கு நிறைய கான்கிரீட் காடுகள் தான் இருக்கின்றன. அது தவிர்த்து கடற்கரை ஓரம் நிறைய புதர்கள் இருந்ததை அழித்து இன்று பொழுதுபோக்கு மையங்கள் வந்து விட்டன. அந்த புதர்கள் மண்ணின் இறுக்கத்தை காத்து வந்த கடவுள்கள். இன்றோ நன்னீர் தாவரங்கள் அங்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றிற்கு கடற்கரையில் வளரும் புதர்கள் போல மண்ணிற்கு இறுக்கம் கொடுக்க வராது. (கடற்கரை மணலும் நன்னீர் தாவரங்கள் வளரும் மண்ணும் வேறுவிதமானவை).<br />
<br />
போரூர் பகுதியின் மிகப்பெரிய கட்டிடம் 2000-ம் ஆண்டு வரை L&T மட்டுமே. அதனை தாண்டி விட்டால் ஒருபுறம் வயல்வெளிகளும் மறுபுறம் போரூர் ஏரியும் மட்டுமே உண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கட்டடங்கள் பார்க்கலாம். அதுவும் அதிகபட்சமாக மச்சுவீடு.<br />
<br />
ஆளுநர் மாளிகையில் இருந்தோ, கிண்டி ரேஸ்-கோர்ஸில் இருந்தோ வேளச்சேரிக்கோ கிழக்கு தாம்பரத்திற்கோ 90-களில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு தெரியும். இந்தப்பகுதியில் செல்வது ஏதோ ஊருக்கு காட்டு வழியில் பயணம் போன்ற அனுபவமே கொடுத்திருக்கும்.<br />
<br />
தரமணி சாலையில் மத்திய கைலாசில் இருந்து திரும்பிய பிறகு எனக்கு தெரிந்து 2002-ம் ஆண்டு வரையில் மிகசில பிரபலமான கட்டிடங்களே உண்டு. அவை முறையே - எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி, புதிதாக திறக்கப்பட்ட டைடல் தொழில்நுட்ப பூங்கா, சற்று இடைவெளி விட்டு NIFT கல்லூரி, சிறுசேரி SIPCOT. அதை தாண்டி நான் அந்த சாலையை அறிந்ததில்லை. அக்காலத்தில் நேர்முக தேர்விற்காக டைடல் பூங்காவிற்கு வரச்சொன்னாலோ, சிப்காட் வரச்சொன்னாலோ மாலை ஐந்து மணிக்குள்ளாக திரும்பிவந்து விடவேண்டுமென்றே யோசித்துக்கொண்டு தேர்விற்கு செல்வேன். இன்று அந்தசாலை அடையாளமே தெரியாமல் மாறி விட்டது. எப்போது பார்த்தாலும் நடமாட்டம் உள்ள சாலையாக மாறி விட்டது.<br />
<br />
ICF பகுதி கூட குறைந்த மக்கள் அடர்த்தி உள்ள பகுதியாக தான் இருந்தது. அங்கு நிறைய வயல்வெளிகலையோ நீர்நிலைகளையோ பார்த்ததில்லை. ஆயினும் பெரும்பாலான பகுதிகள் யாரும் குடியேறாத வெற்று நிலமாகவே இருந்தது. ஒரு முகவரியை சரியாக தேடி அடைவதுக்குள் நாக்கு தள்ளி விடும்.<br />
<br />
அந்த காலத்திலும் சென்னையில் பெரிய மழைப்பொழிவுகள் உண்டு. ஆயினும் பெரும்பாலும் இந்தப்பகுதிகளில் கணுக்கால் மட்டத்திற்கு மட்டுமே பெரும்பாலும் மழைநீர் ஓடும்.<br />
<br />
அப்படிப்பட்ட சென்னையின் இன்றைய கோர உருவம் பற்றி அடுத்த பாகத்தில்...</div>
mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-55220677781409427042015-03-05T13:34:00.001+05:302015-03-05T13:39:10.918+05:30Indhuja Pillai aka IP - An Internet Sensation or a good self marketer?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">Just came across with this two days back when watching news by lunch time. They flashed her as a sensation in this era. Thought she is a real sensation but when you read between lines, she is not sensation but not really. </span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">Everyone were talking that she is not a stereotype person. You either belong to one type or the other. If you doesn't belong to a stereotype you belong to mono-type... You standout from the others but you are not the person belong to that type...</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">Below is her marriage profile she created.</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3P9eNX6iRBJWDtNa7wb6gLq5JE6zXgYjoCN0OEVtRcRgKZGAVjmd0Rl-ktYKcdMdf_nkY17oQ8V8DcqwSyB5qpPg9rdMXGwJW11IGb0RC1HrCBO8c33bk61Df5z3LaIS14LtuSL30zp3m/s1600/Indhuja.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3P9eNX6iRBJWDtNa7wb6gLq5JE6zXgYjoCN0OEVtRcRgKZGAVjmd0Rl-ktYKcdMdf_nkY17oQ8V8DcqwSyB5qpPg9rdMXGwJW11IGb0RC1HrCBO8c33bk61Df5z3LaIS14LtuSL30zp3m/s1600/Indhuja.png" height="359" width="640" /></a></span></span></div>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">After seeing this most of they say it's not stereotype but when the below things are taken consideration, then it will become a different stereotype.</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">1) So Ms.Indhuja, with your name, definitely your father's name is not "Pillai"! It belongs to a community name, Pillaimar. When you attach your community name, you are attaching a religion (Hindu) name with you. But how come you become Atheist?</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">The atheists are a stereotype people. They doesn't believe god but they belong to a religion. Real Atheism is not about god but it is about the belief. Atheists doesn't belong to religion but they bound to the belief. The belief is God for them. When you attached your religion to your name, you doesn't belong to Atheism but a stereotype people of misunderstood Atheists.</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">2) With the first 2 lines of your "More info", could understood that you really not met a strong person who stood by your side - A real man or a real friend (May be I am wrong but definitely I can say you haven't felt the presence of such a person in your life). Who cares how you look from outside?</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">3) <b>"Definitely not an marriage material"</b> - I don't understand this statement given by people (a few I heard too). Probably they consider the material they wear on marriage? I can say I am not a bandage material but bondage material. The band you wear on your marriage - A mangalsutra or a marriage ring or whatever material the people wear to show that they got married. When you are a bandage material of marriage, you bound to the band you wear. When you are a bondage material, you doesn't worry about what you wear but you bound to the relationship. So which material you belong to?</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">4) <b>A man preferably bearded</b>? - The bearded men I came across belongs to few categories - A lazy fellow who doesn't want to shave, people follow factors over religion (the devotees who fasts or priests of different religions, i.e., maulanas, sadhus) or stylists (well-groomed beard). Hopefully the man you look for doesn't belong to the first two categories...</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">5) <b>"Does not hate his job"</b>? - All people who does a job hates the job at one point. The people who do don't hate what they do. The do will be a work not a job for sure... Again it's not only what they do but how they do... When the doing is happening, the enjoyment will be there... So you will not hate what you do but definitely a hate on the job will come across in the mind.</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">6) <b>"He is not a family guy"</b>? - When a man marries and starts the life with his WIFE only he is called as a family man. When he lives with his parents, he belongs to his father's family. When he gets married only, definitely he comes out of that FAMILY and starts his own. So precisely you want an atomic living (I don't call it atomic family as when you live atomic you don't form a family; when you mingle with the relations only you form or belong to a family).</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">7) <b>"Extra points to the one who hates kids"</b> - I understood that you don't want to carry a kid or grow a kid but why hate a kid? If you don't want to carry, then why it is not mentioned exactly? It can be specified as it's o.k. to adopt a kid than hating a kid...</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">8) <b>Great voice and impressive personality?</b> - Hope the voice here is not the vocal front but the command over the language or the words the person speak. By that way a person can impress I believe.</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">A few things from my side. It's not advise or suggestion. It's my opinion.</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">You cannot have all the things in one place. For example, take the taste. You prepare a juice, take mango juice. You add some sugar, you won't feel bad. Add marble size tamarind, two chillies and two table spoons of bitter-gourd juice in it while you grind and drink it. What you feel? Yuck, right? Life is also like that. You cannot get all the quality from a single person. The person comes with some qualities and we need to fill the other.</span></span><br />
<br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">If the person comes with only salt, add spice in his life. That's how you can make the life tastier.</span></span><br />
<br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;">All the sensations will live short; later that will become a news that is forgotten or dragged to an uglier level if it goes wrong at some point. You may haven't created this page to become sensation but it is dragged into media means the outcomes too you need to face. Hope you made your mind ready to take those things.</span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: x-small;"><span style="font-family: Verdana,sans-serif;"><b>Note</b>: I didn't write this to use the wind to create publicity for me. This is created simply not to see it from one side of the coin but there is other side of the things that people need to understand...</span></span><br />
<br />
<span style="font-family: Georgia,"Times New Roman",serif;">FEMINISTS, PLEASE DON'T JUMP IN AND THROW TANTRUMS. I AM A BETTER FEMINIST THAN YOU THINK. </span></div>
mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-57354411634864048392013-03-05T13:00:00.002+05:302013-03-11T17:19:05.574+05:30குழந்தை வளர்ப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஐந்து வயதில் அண்ணன்-தம்பி; பத்து வயதில் பங்காளி என்பதெல்லாம் இன்றைக்கு
வழக்கொழிந்து விட்டது. ஐந்து வயதில் ஐபோன்; பத்து வயதில்
பாய்ப்ரெண்ட் என்பது பெண் பிள்ளைகளுக்கும், ஐந்து வயதில் யூடுப்
(you-tube); பத்து வயதில் பலான படம் என்பது ஆண் பிள்ளைகளுக்கும் தாரக
மந்திரமாக மாறி விட்டது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI3esqHAZ0dHI4rgRTyOS2pr0wUwDo7xil0K2hTPbTgmucAR-jPTnq1nMItPvRqAbJyGkAQUj16RxgcSLCdJbu1ER42-8OjuZaas861v2jwpiH1almYb5KxIpB8q-f1VOkciqiky1tehvd/s1600/babywithphone.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI3esqHAZ0dHI4rgRTyOS2pr0wUwDo7xil0K2hTPbTgmucAR-jPTnq1nMItPvRqAbJyGkAQUj16RxgcSLCdJbu1ER42-8OjuZaas861v2jwpiH1almYb5KxIpB8q-f1VOkciqiky1tehvd/s320/babywithphone.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலோனோர் இந்த
விசயங்களை (mobile, you-tube) ஆகியவற்றை தங்கள் பிள்ளைகளின் கையில்
அவர்களது ஐந்து வயதிலேயே திணித்து விடுகிறார்கள். எல்லாம் கைமீறி சென்ற
பின்னர் குய்யோ முறையோ என்று பிள்ளைகளை தொல்லை பண்ணுகிறார்கள். ஒன்று
அவர்களுக்கு வெளியில் சென்று விளையாடும் சுதந்திரம் கொடுங்கள். அப்படி
இல்லாது மொபைலையோ கணினியையோ கொடுத்தீர்கள் என்றால் உங்கள் பிள்ளைகளுக்கு
தெரியாது அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஏதேனும் ஒரு மென்பொருளை
தரவிறக்கம் செய்து கணினியிலேயோ சிறுபேசியிலேயோ இன்ஸ்டால் செய்து விடுங்கள்.<br />
<br />
பிள்ளைகளுக்கு
கொடுக்கும் சுதந்திரம் அவர்களது நன்மைக்காகவே இருக்க வேண்டுமே தவிர்த்து
அவர்களை தீய பாதைக்கு அழைத்து செல்லக்கூடாது. மேலும் அந்த சுதந்திரம்
அவர்களுக்கு ஒரு வரைமுறைக்குள்ளேயே இருக்க வேண்டும். எல்லை தாண்டுவதாக
தெரிந்தால் உங்கள் கையில் இருக்கும் சாட்டை சுழன்று கடிவாளம் இருக்கப்பட
வேண்டும். அப்படி இல்லாது தன் போக்குக்கு அவர்களை விட்டுவிட்டால்
பின்னாளில் குடை சாய்ந்த பின் வருத்தப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf8uJWQjFxtfDpH7Sb26kpZoRUzRLuxR4IHbY8b1wqUdFjhDhweJsz-m1kN7j1StnriQQU5u4Grcl7FNnVchUHU426n27IMlVW3kWv1NEJgXPHV5tXprcajkfokXhs26LwVoByDEhRMUaI/s1600/article-0-0EF131C000000578-619_468x666.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf8uJWQjFxtfDpH7Sb26kpZoRUzRLuxR4IHbY8b1wqUdFjhDhweJsz-m1kN7j1StnriQQU5u4Grcl7FNnVchUHU426n27IMlVW3kWv1NEJgXPHV5tXprcajkfokXhs26LwVoByDEhRMUaI/s320/article-0-0EF131C000000578-619_468x666.jpg" width="224" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
குழந்தைகளுக்கு சிறுபேசி (mobile) கொடுப்பதாக இருப்பின், பின்வரும் விசயங்களை கவனத்தில் கொள்க:<br />
<br />
1. சிறுபேசி எண் post-paid கனெக்சனாக இருக்கட்டும்.<br />
<br />
2. உங்களது உடனடி தொடர்பு வட்டாரத்துக்குள் (CUG) பிள்ளையின் சிறுபேசி எண் இருக்கட்டும்.<br />
<br />
3.
அவர்களது சிறுபேசியில் sim கார்டை மாற்றினால் உங்களுக்கு தகவல்
தெரிவிக்கும் ஏதேனும் ஒரு மென்பொருளை வாங்கி இன்ஸ்டால் செய்து விடவும்.
இந்த வகை மென்பொருட்கள் அப்ப்ளிகேசன் லிஸ்டில் வெளிப்படையாக தெரியாது.
ஆனால் உங்கள் பிள்ளை தன் சிறுபேசியின் sim கார்டை மாற்றினால் உங்களுக்கு
உடனடியாக தெரிந்து விடும்.<br />
<br />
4. கணினியில் net-nanny போன்ற மென்பொருளை
வாங்கி இன்ஸ்டால் செய்து விடவும். மேலும் proxy சர்வர்களை தடை செய்யும்
முறைகளையும் கண்டறிந்து அதனையும் செட் செய்து விடவும்.<br />
<br />
5.
முக்கியாமானது - இவை அனைத்தையும் உங்கள் பிள்ளை கண்டுபிடிக்காதபடி செய்ய
வேண்டும். இன்றைய பிள்ளைகள் மிக புத்திசாலிகள். ஆகவே நீங்கள் அவர்களை விட
அதி புத்திசாலியாக இல்லாவிடில் உங்கள் பாடு திண்டாட்டம் தான்.<br />
<br />
6.
மிக முக்கியமானது - அவர்கள் ஏதேனும் தவறான பாதைக்கு செல்கிறார்கள் என்று
கண்டுபிடித்து விட்டால், தாம்தூம் என்று குதிக்காமல் பக்குவமாக அவர்களுக்கு
எடுத்து சொல்லி சரி செய்யுங்கள். உங்களுக்கு உங்கள் பிள்ளைகள் மீது அக்கறை
இருக்கிறது என்று தெரிந்தால் அவர்கள் உங்கள் கையை மீறி செல்ல மாட்டார்கள்.<br />
<br />
7.
உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களை நிச்சயமாக அருகில்
வைத்திருங்கள்; அல்லது அவர்களுடன் உங்கள் பிள்ளை நேரம் செலவழிக்கும் படி
பார்த்துக்கொள்ளுங்கள். இது கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு
போகும் குடும்பத்திற்கு மிக அவசியம்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCIBWEuy1sRaANyyu0B50CVJ_qL3L1_b2cZbsZeslhWd8fLVZSli0gDqRs875o0CkU2wvnhrMRxe7J7JsArBgX6_Lju_eLwelh3FpI70emKhyKTO3UQxWQUQa1NfB9DsLVDB5Smpq-tNCD/s1600/childrencellphones.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCIBWEuy1sRaANyyu0B50CVJ_qL3L1_b2cZbsZeslhWd8fLVZSli0gDqRs875o0CkU2wvnhrMRxe7J7JsArBgX6_Lju_eLwelh3FpI70emKhyKTO3UQxWQUQa1NfB9DsLVDB5Smpq-tNCD/s320/childrencellphones.jpg" width="320" /></a></div>
<br />
<br />
இன்றைய பிள்ளைகளை நாளைய வல்லுனார்களாய் வளர்க்க வேண்டியது நமது கடமை. ஆகவே அவர்களை சரியாக வளருங்கள் பெற்றோர்களே.</div>
mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0Bangalore, Karnataka, India12.9715987 77.59456269999998312.4764147 76.949115699999979 13.4667827 78.240009699999987tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-50402434672759848662012-06-29T16:07:00.000+05:302012-06-29T16:07:33.256+05:30உபயோகப்படுத்திய பொருள் வாங்கும் போது கவனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நேற்று அலுவலக வேலையில் மூழ்கி இருந்த போது அருகில் இருந்த நண்பர் கன்னடம் தெரியுமா என்று கேட்டார். இவரை கண்ணன் என்று வைத்துக்கொள்வோம். எனக்கு தெரிந்ததோ அரைகுறை கன்னடம். அதனால் என்ன பிரச்சினை என்று கேட்டேன். கண்ணன் தனது சிறுபேசியில் ஒரு நபர் கன்னடத்தில் பேசுவதாகவும் விஷயம் என்ன என்று கேட்டு சொல்ல வேண்டும் என்று கேட்டார். அருகில் கன்னடம் பேசும் அலுவலக நண்பர்கள் யாரும் இல்லாததால், கண்ணன் தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம் தமிழ் தெரியுமா என்று கேட்க அவரும் தெரியும் என்று சொன்னார்.<br />
<br />
அருகில் இருந்த இன்னோர் தமிழ் பேசும் நண்பர் (இவர் சட்டம் படித்துக்கொண்டிருப்பவர் - இவரை முருகன் என்று வைப்போம் ) தமிழில் அந்த நபரிடம் சிறுபேசியில் பேசினார். சிறுபேசியில் பேசிய நபர் தன்னை ஒரு காவலர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கண்ணனின் வாகனம் ஒரு விபத்தை ஏற்படுத்தியதாகவும் அவரை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்று விசாரித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். ஆனால் கண்ணனோ நான் அந்த காவலர் சொல்லும் இடம் இன்று வரை சென்றதில்லை. வீடு விட்டால் அலுவலகம் என்று இருக்கும் நபர் நான் என்று அழுகாத குறையாக சொன்னார் (இவர் வட இந்தியர்; புதிதாக தோட்ட நகருக்கு வந்திருப்பவர்; ஆகவே அதிகம் வெளியில் சுற்றுவதில்லை).<br />
<br />
பின்னர் ஒரு கன்னடம் பேசும் நண்பர் (இவரை ரகு என்று வைத்துக்கொள்வோம்) ஒருவர் வந்தார். ஆக அவரிடம் சிறுபேசியை கொடுத்த போது அவரிடமும் இதையே அந்த காவலர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் கூறினார். அதனால் சந்தேகம் அடைந்து அவரை அலுவலக முகவரியை கொடுத்து அங்கு வந்து சந்திக்கும்படி கூறி விட்டு, அவர் சொன்ன காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் பேசி வருகின்ற நபர் அந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டோம்.<br />
<br />
ஒரு மணி நேரம் கழித்து அந்த நபர் அலுவலகம் வந்தார். வந்தவர் சொன்ன விஷயம் தான் சற்றே அதிர்ச்சியை இருந்தது. கண்ணன் தனது சொந்த உபயோகத்திற்காக வைத்திருக்கும் சிறுபேசி மற்றொருவரிடம் இருந்து திருடியது என்றும், அந்த எண்ணிற்கு வந்த அழைப்புகளில் கண்ணனின் அலுவலக சிறுபேசி எண்ணில் (Blackberry) இருந்து தான் அதிக அழைப்புகள் வந்திருப்பதால் அவரது அலுவலக எண்ணில் அவர் அழைத்ததாகவும் அந்த காவலர் கூறினார்.<br />
<br />
பின்னர் தான் கண்ணன் சொன்னார். இரண்டு மாதங்களுக்கு முன்பாக தான் அந்த சிறுபேசியை அவர் சங்கீதமான அந்த கடையில் வாங்கினார் என்றும், அந்த சிறுபேசியை குறைந்த விலைக்கு, 3/4 விலையில், ரசீது (பில்) இல்லாமல் அந்த கடை சிப்பந்தி விற்றதாகவும் கூறினார். கண்ணன் செய்த ஒரே நல்ல காரியம் அந்த சிறுபேசியை தனது கடன் அட்டையை உபயோகப்படுத்தி வாங்கியது தான். அதனால் அந்த காவலருடன் சென்று தன்னிடம் இருந்த ஆவணங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு அந்த கடைக்கு காவலருடன் சென்றார். அந்த கடை சிப்பந்தியும் தானே அந்த சிருபெசியை கண்ணனுக்கு விற்றதாகவும், அந்த சிறுபேசியை தனது தமையன் தன்னிடம் விற்பதற்காக கொடுத்து விட்டு அரபு தேசத்திற்கு வாகன ஓட்டுனராக பணியாற்ற சென்று விட்டதாகவும் கூறி பணத்தையும் திருப்பித்தருவதாக கூறி ஒரு பாதி பணத்தை கொடுத்து விட்டதாகவும் கண்ணன் கூறினார்.<br />
<br />
இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், தொலைக்காட்சியில் பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து தாங்கள் பொருட்களை விற்பதாக கூறும் எந்த ஒரு கடையிலும் நீங்கள் உபயோகப்படுத்திய (second hand) பொருட்களை வாங்கினாலும் அதற்கு ரசீது பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் இன்று யார் உண்மையான திருடன் என்று யாருக்கும் தெரியாது. பணம் குறைவாக கொடுக்கிறோமே என்று அன்று சந்தோசப்பட்ட அந்த நண்பருக்கு அரை நாள் வீணானதுடன் மன உளைச்சலும் சேர்ந்து கொண்டதல்லவா.<br />
<br />
அதிலும் அந்த சங்கீதமான சிறுபேசி விற்பனை நிலையத்தில் சிறுபேசி வாங்கிய பலரும் யாதேனும் ஒரு பிரச்சினையை சந்திப்பதாகவே கூறுகிறார்கள். (நானுமே அந்த கடையில் வாங்கி இரண்டு மாதங்கள் மன உளைச்சலில் கஷ்டப்பட்டது வேறு விஷயம்).<br />
<br />
ஆகவே, நண்பர்களே, உற்றார்களே, மக்களே, உபயோகப்படுத்திய (second hand) பொருட்களை எங்கு வாங்கினாலும் மிக்க ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி உங்களிடம் இருந்து ஜகா வாங்கிக்கிறான் இந்த மொக்கச்சாமி.<br />
<br />
-<b style="color: blue;">செந்தில் குமார்</b><br />
<br /></div>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0Varthur Rd, Marathahalli, Bangalore, Karnataka, India12.9568637 77.701164612.9529952 77.6962291 12.960732199999999 77.7061001tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-71012696680513901292012-06-07T14:20:00.000+05:302012-06-07T14:31:00.432+05:30வாழ்த்தாஞ்சலிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: small;">அப்பா. 34வது திருமண நாள் வாழத்துக்கள். சொர்க்கத்தில் சந்தோசமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு கொடுத்த இன்னல்களுக்கு நீங்கள் சொர்க்கத்தில் தான் இருக்க வேண்டும். அந்தளவிற்கு பொறுமையுடன் எல்லா இன்னல்களையும் ஏற்றுக்கொண்டு உள்ளுக்குள் நரக வேதனை அனுபவித்ததற்கு நீங்கள் சொர்க்கத்தில் தான் இருக்க வேண்டும்.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqDs3zSlIT2gghki17ZRpErv9q4Q_qlIsZ_0e9axiDmrW4fFWuSTOyjlrpwdgdWT66GfaMiTq8H27nkd2fcLFZNBi-giC7ZnlMoKJDhKOzVQFmD9Hg5Li3vMFceEshLCHCx2DV57MjTQrP/s1600/reath.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqDs3zSlIT2gghki17ZRpErv9q4Q_qlIsZ_0e9axiDmrW4fFWuSTOyjlrpwdgdWT66GfaMiTq8H27nkd2fcLFZNBi-giC7ZnlMoKJDhKOzVQFmD9Hg5Li3vMFceEshLCHCx2DV57MjTQrP/s320/reath.jpg" width="320" /></a></div>
<span style="font-size: small;"><br /></span><br />
<span style="font-size: small;">ஆனால் உங்கள் மகனான நான் இங்கு சந்தோசமாக இல்லை. ஆம் உங்கள் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அன்று எப்படி சந்தோசமாக இருக்க முடியும். அம்மா இன்று மனதில் அனுபவிக்கும் வேதனையை அவர்கள் சொல்லாவிடிலும் என்னால் உணர முடியும். திருமண நாளை நினைத்துப் பார்க்கும் அந்த தருணத்தில் நீங்கள் இல்லாத வேதனை அவர்களை என்ன பாடு படுத்தும் என்று என்னால் உணர முடிகிறது. நான் இங்கு அலுவலகத்தில் இருந்து இதனை உங்களுக்கு எழுதினாலும் மனமெல்லாம் அம்மாவை சுற்றியே இருக்கிறது.</span><br />
<span style="font-size: small;"><br /></span><br />
<span style="font-size: small;">அவர்கள் பக்கத்தில் சொந்தங்கள் இருந்தாலும் அவர்களது தனிமையை என்னால் இங்கு உணர முடிகிறது . நீங்களும் இதனை யோசித்திருந்தால் பாப்பாவின் திருமணம் முடிந்த கையேடு சென்று இதயத்தை சோதித்திருப்பீர்கள். அன்றிலிருந்தே நீங்கள் பிடிவாதமாக இருந்து இன்று எங்களை தனிமையில் வாட விட்டு சென்று விட்டீர்கள். எங்கள் இதயமாக இருந்த நீங்கள் உங்கள் இதயத்தை சோதிக்காமல் விட்டது எவ்வளவு பாரமாக இன்று என்னை அழுத்துகிறது என்பதை வார்த்தையால் உணர்த்த முடியாது.</span><br />
<span style="font-size: small;"><br /></span><br />
<span style="font-size: small;">உங்களுக்கு மறந்திருக்கலாம். நீங்கள் என்னை இந்த பதினைந்தாண்டுகளில் ஒரே ஒரு முறை தான் திட்டி இருக்கிறீர்கள். எனக்கு தெரியும் நீங்கள் ஏன் அந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் திட்டினீர்கள் என்று. உங்கள் மனதில் எனக்கு ஒரு நன்மதிப்பை பெற்று தந்த அந்த சம்பவத்தை நான் என் இறுதி நாட்கள் வரை மறக்க மாட்டேன். உங்களிடம் நல்ல பெயர் வாங்க பொய் கூட சொல்லிய நாட்கள் உண்டு. அதிகம் மெனக்கெட்டிருக்கிறேன் பல சந்தர்ப்பங்களில். ஆனால் மெனக்கெடாமல் எனக்கு கல்லூரி நாட்களில் நடந்த அந்த சம்பவம் நல்ல பெயர் வாங்கி தந்தது என்று நானறிவேன்.</span><br />
<span style="font-size: small;"><br /></span><br />
<span style="font-size: small;">எனக்கு தெரியும் நீங்கள் எவ்வளவு கோபத்துடன் அந்த தீபாவளிக்கு மறுநாள் இருந்தீர்கள் என்று. அந்த தீபாவளி தினத்தில் கூட உங்களுக்கு சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் கல்லூரியில் விசாரணைக்கு அழைத்திருந்ததை எண்ணி எண்ணி நீங்கள் மாய்ந்தது எனக்கு இப்போது வலிக்கிறது. ஆயினும் பேராசிரியர்களும் துறை தலைவரும் முந்தி அடித்துக்கொண்டு எனக்கு ஆதரவாய் பேசிய போது நீங்கள் ஒன்றும் பேச வில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கும் கூட என்னோடு நீங்கள் பேச வில்லை. ஆனால் நீங்கள் அதற்கப்புறமாக என்னுடன் பேசியது எல்லாம் எனக்கு ஆதரவாக, என் மீது மிக்க நம்பிக்கையுடன் மட்டும் தான். அந்த நம்பிக்கையை உங்களுக்குள் வளர்த்துக்கொண்டு உங்களது உடல் நலத்தை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள்.</span><br />
<span style="font-size: small;"><br /></span><br />
<span style="font-size: small;">உங்களுக்கு என்னுடன் நீண்ட காலம் இருக்கவேண்டும்; என் குழந்தையை தூக்கி கொஞ்ச வேண்டும். சற்றே தடுமாறினாலும் தட்டிக்கொடுத்து முன்னேற்ற வேண்டும் என்று கொள்ளை ஆசை இருந்தது என்பதை உங்களது கடைசி நாட்களில் ஆழமாக புரிந்து கொண்டேன். ஆசை இருந்த அளவிற்கு உங்களுக்கு உங்கள் மீது அக்கறை இல்லாது போய் விட்டது.உங்களது ஆசையை ஒவ்வொன்றாக நிறைவேற்றலாம் என்று ஆரம்பித்த வேளையில் அத்துனை தைரியத்தையும் சந்தோசத்தையும் மூட்டை கட்டி உங்களுடன் எடுத்து சென்று விட்டீர்கள். நீங்கள் சென்ற பின் தான் தெரிந்தது எனக்கும் அம்மாவிற்கும் நீங்கள் தான் தைரியமாக இருந்திருக்கிறீர்கள் என்று.</span><br />
<span style="font-size: small;"><br /></span><br />
<span style="font-size: small;">ஏன் அப்பா உங்களுக்கு அவசரம்? என் குழந்தையை கொஞ்ச கூட உங்களுக்கு மனம் இல்லாது திரும்பி வர முடியாத இடம் சென்று விட்டீர்களே? அதிலும் இறுதி மூன்று நாட்களில் உங்களுக்கு நல்லது செய்கிறேன் என்று நினைத்து உங்களை காப்பாற்ற வேண்டி உங்களை கொடுமைப்படுத்த வைத்து என் மீது தீரா பாவம் வந்து சேருமாறு செய்து எங்களை விட்டு பிரிந்து சென்றதேன்?</span><br />
<br />
<span style="font-size: small;">34வது திருமண நாளில் உங்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் துர்பாக்கியசாலியாய் இன்று அல்லாடும் சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தியது ஏன்?<br /> </span><br />
<span style="font-size: small;">உங்களையும் நீங்கள் விட்டு சென்ற கேள்விகளுக்கு பதிலையும் தேடி அல்லாடும் உங்கள் அன்பு மகன் கண்ணீருடன்...</span><br />
<br />
-<b style="color: #0b5394;"><span style="font-size: x-small;">செந்தில் குமார்</span></b></div>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-87374473045989117902011-07-18T18:58:00.000+05:302011-07-18T18:58:58.012+05:30என் அருமைக் காதலிக்கு..3<b> பாதி</b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0h4afKLms8pwgrySjTmHVvub1tjnHlEEmWKP3V90zSnpk6XYjre6hnkcMEms7wPIo3vuEEEyTgxmyue36teJXoHww7IuHh17qzRMfJj9Nd0hL6WGfU-Uckq2nJUZ0ZCqtzVk4NXvegZqD/s1600/betterhalf.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0h4afKLms8pwgrySjTmHVvub1tjnHlEEmWKP3V90zSnpk6XYjre6hnkcMEms7wPIo3vuEEEyTgxmyue36teJXoHww7IuHh17qzRMfJj9Nd0hL6WGfU-Uckq2nJUZ0ZCqtzVk4NXvegZqD/s320/betterhalf.jpg" width="320" /></a></div><br />
என்னில் பாதியானவள்<br />
எண்ணிலும் பாதியானாள்<br />
அவளுக்கும் எனக்கும் பிறந்த நாளும் திங்களும் பாதி..mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-59413571258945899072011-06-30T11:14:00.003+05:302011-06-30T15:56:33.873+05:30என் அருமைக் காதலிக்கு..2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="font-size: small;"><b>மலர்கூட்டம்</b></span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT9hm8zT38t535jU4MsmGgjTYTuSJkHOYzob6rTZYY8O3wPv-ilexfBbUeIpLZb08YcXDVhMI83HqYJLYzhjymquMWMQLd1GcDoUdzE2nQeX2pX-6MaHCy5wHo51jGBY40X9Q7pMVzC8uu/s1600/flower-bouquet.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT9hm8zT38t535jU4MsmGgjTYTuSJkHOYzob6rTZYY8O3wPv-ilexfBbUeIpLZb08YcXDVhMI83HqYJLYzhjymquMWMQLd1GcDoUdzE2nQeX2pX-6MaHCy5wHo51jGBY40X9Q7pMVzC8uu/s320/flower-bouquet.jpg" width="285" /></a></div><span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;"></span><br />
<span style="font-size: small;"><br />
எந்தன் காதலின் அடையாளமாய் </span><span style="font-size: small;"><br />
இந்த மலர்கள்<br />
உன்னருகில் நான்<br />
<br />
என்னின் சுவாசமே மலர்களின் </span><span style="font-size: small;"><br />
மணமாய் வீச<br />
உனக்குள் வாழ்வேன் நான்</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;"><b>நினைவலைகள்</b></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvj6JAYOlmJjLrC1EmIg1-l2Iu3oSpKn3PjYJJTiolO6VADzCYPb0RHoCwJuzU9L1ilv6IcdlTtCD3ALusNpXA10fFf28xMxqwVlmIMQ8wEoeQUTsfvxpW8_VhS8RDBnDHwJm6gU0ADQfz/s1600/pink_hearts-1483.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="283" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvj6JAYOlmJjLrC1EmIg1-l2Iu3oSpKn3PjYJJTiolO6VADzCYPb0RHoCwJuzU9L1ilv6IcdlTtCD3ALusNpXA10fFf28xMxqwVlmIMQ8wEoeQUTsfvxpW8_VhS8RDBnDHwJm6gU0ADQfz/s320/pink_hearts-1483.png" width="320" /></a></div><span style="font-size: small;"><b> </b><br />
</span><br />
<span style="font-size: small;"><br />
உன் நினைவுகளை உதறி<br />
வேலையில் கவனம் வைக்க<br />
விழைகிறேன்<br />
<br />
உள்ளம் கேட்டது!<br />
உன் இதயம் தொலைத்து<br />
உலகில் என்ன செய்து என்ன புண்ணியம்?<br />
</span><br />
<div style="text-align: left;"><span style="font-size: small;"> இதயமாய் நீ...</span><span style="font-size: small;"> </span></div></div>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-53674552349825105812011-06-20T17:14:00.000+05:302011-06-20T17:14:30.542+05:30கழகம் நல்ல கலகம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><span style="font-size: small;">இருபது நாட்களுக்கு முன் அப்பாவை மருத்துவமனையில் வைத்திருந்த போது மருத்துவமனை பக்கத்தில் இருந்த ஒருவரது இல்லத்தில் திருமணம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது... அவர் தி.மு.க-வை சேர்ந்தவர் போலும்... கழக பாடல்கள் சில நேரங்களில் ஒலித்துக்கொண்டிருந்தது... அவற்றை கேட்ட போது அந்த கழக பாடகர்கள் இப்போது கட்சியை பற்றி பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்ததன் விளைவு இந்த பதிவு...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">முதல் பாடல் ஆ.ராசா மற்றும் கனிமொழியை பற்றியது: </span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">கற்பூர கனல் வார்த்தை கலைஞர் சொல்லட்டும்</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">கழக காளையர்கள் கூழ் குடித்து கம்பி எண்ணட்டும்...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">இரண்டாவது பாடல் கலைஞரை பற்றியது:</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">கள்ளத்தனம் செய்த கருணாநிதி ஓ...க, ஓ...கவே...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">மூன்றாவது பாடல் 2G பற்றியது:</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">நிதி வேண்டும்... 2G நிதி வேண்டும்...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">நிதி வேண்டும்... DB ரியாலிட்டி நிதி வேண்டும்...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">நான்காவது பாடல் வாரிசுகள் (அழகிரி-ஸ்டாலின்) பற்றியது:</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">கலகம் நல்ல கலகம்...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">நம் அண்ணன் தம்பி கலகம்...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">ஊரே சேர்ந்து சிரிக்கும் கலகம்...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">ஐந்தாவது மற்றும் ஆறாவது பாடல் கலைஞர் பாடுவது...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">எங்கே தயாளு... எங்கே ராசாத்தி...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">அங்கே எனக்கு இடம் வேண்டாம்... (எங்கே நிம்மதி பாடல் மெட்டு)</span></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="font-size: small;"> (கனிமொழி பற்றி கலைஞர் பாடுவது)</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன ஊர விட்டு </span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே...</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="font-size: small;">-<b style="color: blue;">மொக்கச்சாமி</b></span></div></div>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-91469589221164485122011-03-23T18:51:00.002+05:302011-03-23T18:57:09.158+05:30முதியோர்களுக்கான இலவச பேருந்து பயணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">அய்யா கலைஞர் தேர்தல் அறிக்கையில் முதியோர்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அறிவித்திருக்கிறார்... கீழே உள்ள படத்தில் இருக்கும் பேருந்தில் யார் தான் காசு கொடுத்து பயணிக்க விரும்புவார்கள்... முதியோர்களுக்கு இலவசம் என்பதற்கு பதிலாக அனைவருக்கும் இலவசம் என்று அறிவித்தால் கூட இப்படிப்பட்ட பேருந்தில் பயணிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள்... </div><div style="text-align: left;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYrDCmOZwXrzhnxtDTBWw-PjWuTHMO_o6U-Z_HV_E75JWMk2vt5u2mUYj10jzWTrmxeDyElmrSf454jB5in76WtT3yHdzl_I__DGFYVeVWjCTp17q737neGLXO1cxxw2WcC21Je-nJTB17/s1600/freebus.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYrDCmOZwXrzhnxtDTBWw-PjWuTHMO_o6U-Z_HV_E75JWMk2vt5u2mUYj10jzWTrmxeDyElmrSf454jB5in76WtT3yHdzl_I__DGFYVeVWjCTp17q737neGLXO1cxxw2WcC21Je-nJTB17/s640/freebus.JPG" width="500" /></a></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><div style="text-align: left;">ஆனால் என்ன கொடுமைன்னா, முதியோர்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு, அதனை செயல்படுத்தும் பொது, ஏனையோருக்கு ரூ.2/- குறைந்தபட்சம் கட்டணத்தை ஏற்றி விடுவார்கள்... அப்படி ஏற்றினாலும் இப்படிப்பட்ட பேருந்துகளை தான் இயக்குவார்கள்... என்ன கொடுமை சார் இது...</div></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b style="color: blue;">- மொக்கச்சாமி</b></div></div>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-31706353072601394322011-03-21T13:10:00.014+05:302011-03-21T14:51:26.327+05:30கனவே கலையாதே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">நாங்கள் நான்கு பேரும் வரிசையாக அமர்ந்திருந்தோம். எனக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண்மணி தன் தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்... எதிரில் உட்கார்ந்திருந்த பெண் (எ.உ.பெ.) சற்றே மிரண்டு போய் காணப்பட்டாள். இந்தப்பக்கம் உட்கார்ந்திருப்பவர்களுடன் நான் நிறுவன வளர்ச்சி மற்றும் வேலை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்...</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b>பெண்மணி</b>: நீங்கள் எந்த வருடம் படித்து முடித்தீர்கள்?</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b>எ.உ.பெ</b>: படித்து முடித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன...</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b>பெண்மணி</b>: படித்து முடித்தவுடன் வேலை கிடைத்து சேர்ந்து விட்டீர்களா? அல்லது வேலையில் சேரும் முன் சற்று இடைவெளி உண்டா...</div><div style="text-align: left;"><b><br />
</b></div><div style="text-align: left;"><b>எ.உ.பெ: </b>படித்து முடித்தவுடன் வேலைக்கு சேர்ந்து விட்டேன்.</div><div style="text-align: left;"><b><br />
</b></div><div style="text-align: left;"><b>பெண்மணி: </b>ஆரம்பத்தில் இருந்தே தற்போது வேலை பார்க்கும் கம்பெனி தானா? அல்லது வேலை மாற்றி இருக்கிறீர்களா?</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b>எ.உ.பெ</b>: வேறு வேலைக்கு இது வரை மாற்ற வில்லை... அதனால் தான் விரைவில் பிரமோஷனும் கிடைத்தது...</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"></div><div style="text-align: left;"><b>பெண்மணி</b>: எங்கே தங்கி இருக்கிறீர்கள்? எப்படி அலுவலகத்திற்கு சென்று வருகிறீர்கள்?</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b>எ.உ.பெ</b>: சொந்த பந்தங்கள் இந்த ஊரில் இருந்தாலும், என் தோழிகளுடன் வீடு எடுத்து தங்கி இருக்கிறேன்... அலுவலக வாகனத்திலேயே சென்று வந்து விடுகிறேன்... சாப்பாடு கூட பெரும்பாலும் வீட்டில் தான் சமைத்து உண்ணுகிறேன்...</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b>பெண்மணி</b>: எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க?</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b>எ.உ.பெ</b>: xxxxx சம்பளம் வாங்குறேன்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b>பெண்மணி</b>: இப்போது பார்க்கும் வேலையை விட்டுவிட முடியுமா?</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">எ.உ. பெண் சற்றே தயங்க, இந்த பெண்மணி என்னை நோக்கி திரும்பிய வேலையில் அந்த பெண் "தேவை ஏற்பட்டால் இப்போது கூட வேலையை விட முடியும்; அப்புறம், எப்போ offer letter தருவீங்க..." என்று கேட்க, நான் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தேன்... பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணியான என் தங்கை என்னை குழப்பத்துடன் முறைக்க, நான் சொன்னேன்: "பொண்ணு பாக்க வந்த இடத்துல வேலைக்கு இன்டர்வியு செய்வது போல கேள்வி கேட்டால் இப்படி தான் கடைசியில் கேள்வி வந்து விழும்... I like the question ... அப்புறம் பொண்ணையும்..."</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இதை சொல்லும் போதே முகத்தில் சிலீர் என நீரின் தாக்கம் தெரிய, அடித்து பிடித்து எழுந்தால், அங்கே இடுப்பில் கை வைத்துக்கொண்டு எனது தம்பி, "நான் காலங்காத்தால குளித்து முடித்து ஆபீசுக்கு கிளம்பிக்கிட்டிருந்தா, நீ நல்லா மொக்க கனவு கண்டு உளறிக்கிட்டு இருக்கே" என்கிற பாணியில் ஒரு பார்வை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்...</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">ஏண்டா இப்படி தண்ணி ஊற்றி தலையணையை நனைத்தாய் என்று கேட்டால், "ஹ்ம்ம்... காலாகாலத்தில் கல்யாணம் நடந்திருந்தால், இப்படி மொக்கை கனவு கண்டு உளறிக்கொண்டிருக்க மாட்டாய்; அப்படி உளறிக்கொண்டிருந்தால் அண்ணி ஒரு வாளி தண்ணீரை மேலே ஊற்றி மொத்த படுக்கையையும் நனைத்திருப்பாள்... நீயும் அதற்கு பயந்தே இப்படி மொக்கை போடாமல் இருப்பாய்... எழுந்து போய் குளி... நான் ஆபீசுக்கு கிளம்பறேன்!" என்று சொல்லி விட்டு கிளம்பினான்...</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நானும் இப்படி கலகலப்பான பொண்ணுங்களை எல்லாம் கனவுல தான் பொண்ணு பார்க்க போக முடியுது; நேர்ல எங்கே இப்படியெல்லாம் காணக்கிடைக்கிறது என்று தலைவிதியை நொந்து கொண்டே குளிக்கப்போனேன்...</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b>-<span style="color: #0000ee;">மொக்கச்சாமி</span></b></div><div style="text-align: left;"></div></div>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-67354102008775306682011-03-17T14:01:00.012+05:302011-03-21T14:48:32.729+05:30தமிழகத்திற்கு இன்னொரு மணிமகுடம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">விளையாட்டு போட்டிகளில் உலக அளவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சாதிப்பது மிகவும் குறைவு தான்... அல்லது வெளிச்சத்திற்கு வராதவர்கள் அதிகம்... வெளிச்சத்திற்கு வந்து தலைகாட்டி விட்டு காணாமல் போனவர்களும் இங்கு அதிகம்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இங்கிருந்து சாதித்த வீரர்களான, விஸ்வநாதன் ஆனந்த் (செஸ் விளையாட்டின் முதல் இந்திய கிராண்ட் மாஸ்டர்), நரேன் கார்த்திகேயன் (பார்முலா-1 கார் பந்தயங்களில் பங்கேற்ற முதல் இந்தியர்), அர்மான் இப்ராஹீம் (இவரும் தேரோட்டி- கார் தான்), தீபிகா பலிகால் (squash) வரிசையில் சென்னையில் இருந்து இன்னொரு விளையாட்டு வீரர்... எல்லோரும் நான்கு கால் குதிரையில் பாய்ச்சல் காட்டிக்கொண்டிருக்கும் பொது இவர் மட்டும் எனக்கு இரண்டு கால் குதிரையே போதும் என்று பைக் ரேசில் கலந்து கொண்டவர்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இப்போது MotoGP என்கிற இரு சக்கர வாகனங்களுக்கான போட்டியில் 125cc பிரிவில் இந்தாண்டிற்கான தோஹாவில் துவங்க இருக்கும் பந்தயத்தில் WTR -Ten10 அணி சார்பில் அறிமுகம் ஆகிறார்... 62 ஆண்டுகால MotoGP வரலாற்றில் பங்கேற்கும் முதல் இந்தியர் ஒரு தமிழர் என்பதில் நமக்கு பெருமை தானே...</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இவரைப்பற்றி தெரிந்து கொள்ள <a href="http://en.wikipedia.org/wiki/S._Sarath_Kumar">இங்கே</a> சொடுக்கவும். இவர் MotoGP பந்தயத்தில் பங்கேற்கப்போகும் செய்தி பற்றி தெரிந்து கொள்ள <a href="http://www.zigwheels.com/news-features/news/sarath-kumar-prepares-for-motogp-debut/7835/1">இங்கே</a> சொடுக்கவும்...<br />
<br />
<div style="color: #a2c4c9; text-align: left;"><span style="font-size: small;">-</span><span style="color: blue; font-size: small;"><b>மொக்கச்சாமி</b></span></div><div style="text-align: left;"><br />
</div><b>டிஸ்கி</b>: ஒரே வருத்தம் என்னன்னா, போட்டியில் தோற்கும் போது மாநில முத்திரை குத்தி விட்டு, சாதிக்கும் போது மட்டும் இந்தியர் என்று மார்தட்டிக் கொள்வது தான்... இதில் பொதுமக்களும் சரி; பத்திரிக்கைகளும் சரி; ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக தான் இருக்கிறார்கள்... அதனால் தான் இந்த பதிவில் மாநிலத்திற்கு முதலிடம்; இந்தியாவிற்கு இரண்டாம் இடம்...<span style="font-size: small;"><br />
</span></div></div>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-84446777994635064322011-02-08T10:50:00.000+05:302011-02-08T10:50:43.493+05:30விதை...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">கூளமாய் மண்ணில்<br />
வீழ்ந்து மக்குவேனென்று<br />
விளைந்தாயோ?<br />
<br />
ஆழம் பிளந்து<br />
விளையும் விதையடி நான்<br />
வளமாய் நலமாய்<br />
<br />
நிழல் தருவேன்<br />
இலவசமல்ல உனக்கு மட்டும்<br />
<br />
- <b style="color: blue;">மொக்கச்சாமி</b></div>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-47631936758973677222011-02-04T18:20:00.000+05:302011-02-04T18:20:24.836+05:30நட்டு கழண்ட கேசு...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">அய்யா கலைஞர் நேத்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சை பற்றி படிக்கும் போது டாம் & ஜெர்ரியில் வரும் அந்த குட்டி எலி போல விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் போல் தான் இருக்கிறது... ராஜா பதவியில் இருக்கும் போது புரிந்த சாதனைகள் என்று ஒரு பட்டியல் இட்டிருக்கிறார்... அதில் ஒன்று பணக்காரர்களின் கையில் இருந்த அலைபேசியை ஏழைகளிடம் கொண்டு சேர்ப்பித்திருக்கிறார் என்பதுவும் ஒன்று...<br />
<br />
இன்னும் அம்பானி குழுமம் இவர் மீது வழக்கு தொடுக்காது இருக்கிறதே என்று வருத்தமாக இருக்கிறது... 2003-ம் வருடமே, ரிலையன்ஸ் குழுமம் ஐநூறு ரூபாய்க்கு அலைபேசியுடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதை அய்யா மறந்து விட்டார்... அவர்கள் அதனை மக்களிடம் விற்காமல் வெளிநாடுகளில் இருப்பது போல தங்களிடம் அந்த அலைபேசியை வாடகைக்கு எடுப்பது போன்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி விட்டார்கள்... அதில் அவர்களும் சரி; பொதுமக்களும் சரி; எல்லோருமாய் சேர்ந்து செய்த தில்லுமுல்லுகள் கொஞ்ச நஞ்சம் அல்ல... ஆயினும் பெரும்பாலான கீழ்தட்டு மக்களிடம் இந்த சேவை சென்றடைந்தது...<br />
<br />
அப்புறம் ராஜாவை மாவலி (மகாபலி என்று கேள்விப்பட்டதாக ஞாபகம்) சக்கரவர்த்தியோடு ஒப்பிட்டிருக்கிறார்... எந்த சேட்டன் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்போகிறார் என்று தெரிய வில்லை... சரி அதை விடுவோம்... ராஜா நல்லவர்; அவர் மீது காழ்ப்பு கொண்ட எல்லோரும் அவரை பதவியில் இருந்து இறக்கி விட்டார்கள். ஆயினும் அவர் எல்லோர் இதயங்களிலும் வாழ்வார் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்... சரி! அவரை பதவியில் இருந்து தூக்குவதில் மிகவும் முனைப்பாக செயல் பட்டவர்கள் அவரது கட்சியின் முக்கிய நபர்கள் - மூத்த மகனாகிய அழகிரி மற்றும் தயாநிதி மாறனும் தான். அப்படியானால் தனக்கு கீழேயே புல்லுருவிகளை வைத்துக்கொண்டு "கழகம் நல்ல கழகம்" என்று பாட்டு வேறு பாடிக்கொள்கிறார்கள்... "கலகம் நல்ல கலகம்" என்று பாடினால் நன்றாக இருக்கும்...<br />
<br />
இவர் மாவலி சக்கரவர்த்தியின் வழி ஆட்சி நடத்துகிறாராம்... நாமும் அப்படியே எடுத்துக்கொள்வோம். எல்லோருக்கும் வண்ண தொலைகாட்சி பெட்டிகள் தந்தார்... ஆனால் அதனை இயக்க தேவையான மின்சார உற்பத்தியை அதிகரிக்காமல் விட்டு விட்டார்... தன்னோட வீட்டுக்கும் சின்ன வீட்டுக்கும் மற்றும் எல்லா உறவினர்கள் மற்றும் அமைச்சர்கள் வீட்டுக்கும் தடை இல்லாத மின்சாரத்தை உபயோகப்படுத்தி விட்டு தொழிற்சாலைகளும் பொது மக்களும் மின்சாரம் இல்லாது இருக்க கற்றுக்கொடுத்தார்...<br />
<br />
அப்புறம், கலைஞர் தொலைகாட்சி தொடங்கினார்... இதற்கு காசு எங்கே இருந்தையா வந்தது... கட்சி காசு என்றால் பொதுக்குழு, கூட்டுக்குழு மற்றும் எல்லா கருமாந்திரம் பிடிச்ச குழுவின் ஒப்பமும் கடைநிலை கட்சி தொண்டனின் ஒப்பமும் வாங்கிக்கொண்டு தான் கட்சி காசை செலவழித்தீரோ? அப்படி இல்லாது உங்களது சொந்த காசு என்றால் உங்களிடம் எப்படி இத்தனை கோடிகள்... இன்னிக்கும் உங்கள் கட்சியில் இருந்து இறந்து போன பல தலைவர்கள் குடும்பங்கள், அதிலும் ஒரு மனைவி, இரு குழந்தை என்று வாழ்ந்தவர்கள் குடிசை வீட்டில் வாழும் போது உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பணம் வந்தது...<br />
<br />
உங்களது இரண்டு பேரன்கள் பட தயாரிப்பு நிறுவனங்கள் வைத்து நடத்துகிறார்கள்... ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் செலவு பண்ணி படம் ஓரளவுக்கு ஓடினாலே நடுத்தெருவுக்கு வரும் பல தயாரிப்பாளர்கள் இருக்கும் போது, ஒன்றுமே இல்லாத படத்தை எடுத்து எல்லா திரை அரங்குகளையும் நிறைத்து காசு சம்பாதிக்கிறார்களே அது எப்படி? எப்படி உங்கள் குடும்பத்திற்கு மட்டும் இது சாத்தியமாகிறது? எங்களுக்கும் கற்றுக்கொடுங்களேன்... <br />
<br />
-<b style="color: blue;">மொக்கச்சாமி</b></div>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-44766481992965394632010-12-22T10:44:00.013+05:302010-12-22T10:52:08.010+05:30இந்த நாள் இனிய நாள்...உங்களுக்கு 22-12 என்றவுடன் என்ன ஞாபகம் வரும்? ஏதாவது போட்டியின் முடிவில் இரு அணிகள் எடுத்த ஸ்கோர்... எல்லா வருடமும் வருகின்ற ஒரு தேதி... மாயன் நாள்காட்டியின் படி 2012-ல் உலகம் அழிந்த பின் வருகின்ற இரண்டாம் நாள். 2010-ம் ஆண்டின் கடைசி கிரஹணம் (நேற்று சந்திர கிரஹணம்) முடிந்த பின் வரும் தேதி... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...<br />
<br />
எனக்கு இரண்டு விஷயங்கள் தான் ஞாபகம் வரும்... ஒன்று உலகின் மிக நீண்ட இரவு முடிந்து வரும் சூரியனின் கதிர்கள்... ஆம். இந்த தினம் தான் உலகின் மிக நீண்ட இரவின் பின் வரும் விடியல்... ராசிபலன்களின்படி இன்று தான் தனுர் (Sagittarius) ராசியின் முடிவும் மகர (Capricorn) ராசியின் தொடக்கமும்...<br />
<br />
இரண்டாவது 2001-ம் ஆண்டு... என் வாழ்க்கையின் பக்கங்களை புரட்டிப்போட்ட பயணம் துவங்கிய நாள். ஏதோ தலைகீழாய் புரட்டிப்போட்டால் பரவாயில்லை... கன்னாபின்னாவென்று புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கையின் பயணம்... உண்மையில் சொல்வதானால் அந்த புரட்டிப்போடப்பட்ட வாழ்க்கை இந்த நாளை ஞாபகத்தில் வைத்திருக்க உதவ வில்லை... ஆனால் அந்த 21-ம் தேதி நடந்த ஒரு சம்பவம் தான் இந்த தினத்தை இன்னும் பசுமையாக வைத்திருக்க உதவுகிறது...<br />
<br />
அந்த ஆண்டு தான் முதுகலை கல்வியின் கடைசி அத்தியாயமாக முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் சம்பந்தமாக சென்னைக்கு அதுவும் 21-ம் தேதி பயணம் தொடங்கியது... என்னையும் சேர்த்து ஏழு நண்பர்கள்... திருச்சி ரயில் நிலையத்தில் தொடர்வண்டி (train) நின்று கொண்டிருந்தது... இரண்டு நண்பர்கள் சேர்ந்தாலே கொட்டம் தான்... ஏழு பேர். கேட்கவா வேண்டும்? இரண்டு நண்பர்கள் மட்டும் பெட்டியில் இருந்து இறங்கி வெளியே சென்றார்கள்... பெட்டியில் இருந்தவர்கள் நன்றாக உறங்க ஆரம்பித்திருந்த நேரம்... எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன...<br />
<br />
தொடர்வண்டியும் கிளம்பப்போகும் விதமாக விசில் ஊதும் சத்தம் கேட்டது... இரவு 12 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. தொடர்வண்டியில் இருந்து இறங்கிய இரண்டு நண்பர்களும் இன்னும் வந்தபாடில்லை... மற்ற நண்பர்கள் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம்... திடீரென தொடர்வண்டியின் விளக்குகள் ஏற்றப்படாமலேயே வெளிச்சம் அதிகமாகியது... வெளிச்சம் நாங்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி தான் நகர்ந்து வந்து கொண்டிருந்தது...<br />
<br />
தொடர்வண்டி நிலையத்தின் கடிகாரம் 12 மணியை பறைசாற்றும் விதமாக மணி அடிக்கத்தொடங்கியது... அதிகப்படியான வெளிச்சத்திற்கு காரணம் வண்டியில் இருந்து இறங்கிச்சென்ற நண்பர்கள் கையில் கொண்டுவந்த பன் மீதிருந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சம்... பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பர்களும் அந்த இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து "Happy Birthday to you" என்று பாட ஆரம்பிக்க, மற்றவர்கள் தூக்கம் கெட்டாலும் பரவாயில்லை என்று நண்பர்களுடன் சேர்ந்து கொள்ள அன்றைய இரவு அதகளப்பட்டது...<br />
<br />
நிச்சயமாக இப்படி ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தை எண்ணிப் பார்த்ததில்லை... ஏனெனில் அன்றைய தினம் வரையில் வாழ்க்கையில் பிறந்தநாளும் அதுவுமாக புத்தாடை உடுத்தி வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது மட்டுமே வழக்கமாகக் கொண்டிருந்த எனக்கு நிச்சயமாக ஒரு ஆனந்த அதிர்ச்சி தான்... ஆயினும் அந்த பிறந்தநாள் நிச்சயமாக எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக மாறி விட்டது...<br />
<br />
<br />
இன்று அந்த நண்பர்களில் சிலருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக ஒட்டு மொத்தமாக அவர்களிடம் இருந்து விலகி இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு உன்னதமான அனுபவம் கொடுத்த அவர்களுக்கு நிச்சயமாக ஒவ்வொரு பிறந்தநாளிலும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்... நன்றி வானவில் நண்பர்களே...<br />
<br />
<br />
-<b style="color: blue;">மொக்கச்சாமி</b><br />
<br />
<u><b>பி.கு.</b></u>: ஆம் இந்த நாள் (22-12) மிக நீண்ட இரவின் பின்னால் வரும் விடியலின் விடிவெள்ளியான (ஹிஹிஹி - இதெல்லாம் கண்டுக்கப்படாது)எனது பிறந்த தினமும் கூட...<b style="color: blue;"> </b>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-88609914664141280262010-11-23T15:50:00.001+05:302010-11-23T15:54:56.301+05:30ஆட்டோவா கொக்கா...<b>மு.கு.</b>: இந்த ஆண்டு துவக்கத்தில், ஆட்டோ பற்றி எழுதிய ஒரு பதிவின் மீள் பதிவு...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcTAmeZvxwkX4fucP-EvuII17k3V7RfCZRyape6H7lfBAYr3dzI3wBKLCaKuXjcP9_K8M3gMZSZywfvj2CNjMohxUs9se0bUkd4CgPQsnKkQT7TUOy6qeEdfk9sACkjxxGmxmSllIWEDmb/s1600/ARick.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcTAmeZvxwkX4fucP-EvuII17k3V7RfCZRyape6H7lfBAYr3dzI3wBKLCaKuXjcP9_K8M3gMZSZywfvj2CNjMohxUs9se0bUkd4CgPQsnKkQT7TUOy6qeEdfk9sACkjxxGmxmSllIWEDmb/s1600/ARick.jpeg" /></a></div><br />
<br />
சென்ற சனிக்கிழமை, ஊருக்கு சென்றிருந்த போது, <a href="http://mightymaverick.blogspot.com/2010/11/blog-post_23.html">மருத்துவமனை</a> சென்றுவிட்டு வெளியே வரும்போதே மணி பத்தை நெருங்கி விட்டது... நேராக, பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் ஏற சென்ற போது, பேருந்து நிலையத்தில் சற்றே ஆஜானுபாகுவாய் ஒரு ஆட்டோ ஓட்டுனர் மறித்தார்... அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இங்கு கீழே... (<b>ஆ.ஓ. - </b>ஆட்டோ ஓட்டுனர்)<br />
<br />
<b>ஆ.ஓ.</b>: சார், ஆட்டோவா...<br />
<br />
<b>நான்</b>: (சுற்றி முற்றி பார்த்துவிட்டு) இல்லப்பா மனுஷன்...<br />
<br />
<b>ஆ.ஓ.: </b>(சற்றே குழப்பத்துடன் பார்த்துவிட்டு, பின் புரிந்தவுடன்) சார், நான் ஆட்டோ வேணுமான்னு (நம்மைப்பற்றி தெரியாமல்) கேட்டேன்...<br />
<br />
<b>நான்</b>: இல்லப்பா... ஆட்டோ எல்லாம் வாங்குற அளவுக்கு இப்போ கையில அவ்வளவு காசு இல்ல; அப்படியே இருந்தாலும் கொஞ்சம் கூடுதலா பணம் போட்டா, டாட்டா நானோ காரே வாங்கிடலாம்... அதனால இது வேண்டாம்...<br />
<br />
ஆ.ஓ. என்ன நினைத்தாரோ...<b> </b>இரண்டடி பின்வாங்கி விட்டு இன்னும் இரண்டு ஓட்டுனர்களை வேறு அழைத்தார்... நான் அவரை கடித்துவிடுவேனோ என்ற பயத்திலா; அல்லது எனது மொக்கையை கேட்டு நல்லா நாலு சாத்து சாத்தனும் என்கிற கோபத்திலா என்பது தெரியவில்லை...<br />
<br />
<b>ஆ.ஓ.:</b> இன்னா நைனா (இவர் என்னை விட நான்கைந்து வயது மூத்தவரைப்போல இருந்தார். இவருக்கு நான் நைனாவாம்)... ஆசுபத்திரியிலேருந்து எஸ் ஆகி வந்துட்டியா?<br />
<br />
<b>நான்</b><b>: </b>ஆமாப்பா... _________ ஆஸ்பத்திரி போயிட்டு தான் வரேன்...<br />
<br />
<b>ஆ.ஓ.:</b> அந்த ஆஸ்பத்திரியில கைகால் உடைஞ்சாலோ, குழந்தை இல்லாட்டியோ தானே போய் பாப்பாங்க... நீ எப்படி அங்கே இருந்து........ (நம்மளை நட்டு கழண்ட கேசுன்னு நினைச்சுட்டார் போல)<br />
<br />
<b>நான்</b>: ஆமாப்பா, காலுல கொஞ்சம் பிரச்சினை... அதான் ______ மருத்துவமனைக்கு போயிட்டு வரேன்...<br />
<br />
<b>ஆ.ஓ.</b>: (இப்போ கொஞ்சம் தெளிந்தவராக) எங்கே சார் (நைனா இப்போ மீண்டும் சார் ஆகிட்டார்) போகணும்?<br />
<br />
<b>நான்</b>: வீட்டுக்கு தான்... (இப்போ இந்த ஆ.ஓ. அழைத்த அவரது இரண்டு நண்பர்களுக்கும் கோபம் வந்துடுச்சு... என்னையும் அந்த ஆ.ஓ. வையும் முறைத்துக்கொண்டு நின்று கவனித்துக்கொண்டிருந்தார்கள்)<br />
<br />
<br />
<b>ஆ.ஓ.:</b> நாங்க என்ன காட்டுக்குன்னா சொன்னோம் (பேச்சு தொனி மாறி இருந்தது)... எந்த ஏரியாவுக்கு போகணும்? (அவரும் விடுவதாய் இல்லை)<br />
<br />
<b></b>இப்போது சற்றே அந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் எனக்கும் இடைவெளி இருந்ததினால், அவர்களை தாண்டி நடக்க முயற்ச்சி செய்தேன்...<br />
<br />
<b>ஆ.ஓ.:</b> இன்னா சார்... பேசிக்கிட்டு இருக்கும் போதே நீ போய்க்கிட்டு இருக்க...<br />
<br />
<b>நான்</b>: இல்லப்பா... என்னோட ஏரியாவுக்கு நிச்சயமா நிறைய பேருந்துகள் உண்டு... நான் அதிலேயே போய்க்கறேன்...<br />
<br />
<b>ஆ.ஓ.</b>: இதை முன்னாடியே சொல்லிட்டு போயிருந்திருக்கலாம்ல?<br />
<br />
நான் <b></b>எதுவும் பேசாமல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட்டேன்... அந்த ஆட்டோ ஓட்டுனரின் நண்பர்கள் அவருக்கும் எனக்கும் சேர்த்து அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள்...<br />
<br />
<br />
<b>பி.கு</b>: இது எனக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கும் ஒரு உரையாடல் நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதின் கற்பனையே... ஏனெனில் நான் கூறிய இரண்டாவது பதிலிலேயே ஒன்று அவர் என்னை போக விட்டிருப்பார்; அல்லது ஏதேனும் ஆயுதத்தை எடுத்து மண்டையை பிளந்திருப்பார்... நானும் பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுனர்களை அந்தளவிற்கு மதிப்பதில்லை... அதற்காக எனக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் என்றாலே வெறுப்பு என்று நினைத்து விட வேண்டாம்... 90% ஆ.ஓ. க்கள் இப்படி தான்... ஆனால் மீதமுள்ளவர்கள் நல்லவர்களாய் இருந்தாலும் பெரும்பான்மையானவர்கள் இப்படி இருப்பதினால், அவர்களும் ஒதுக்கப்பட்டவர்களாய் ஆக்கப்படுகிறார்கள்...<br />
<br />
உண்மையில் சொல்லப்போனால், ஒரு லிட்டருக்கு ஆட்டோவானது 24 கிமீ ஓடும்... பராமரிப்பு செலவு, இஞ்சின் ஆயில் செலவு என்று மற்ற செலவுகளையும் சேர்த்து கணக்கு பண்ணினால், இவர்களுக்கு ஒரு நாளைக்கான செலவு, ரூ.100/=க்கு (24 கிமீ மட்டும் ஓட்டினால்) மேல் போகாது... அப்படி இருக்கும் போது இவர்கள் இரண்டு கிலோமீட்டர் மட்டும் ஓட்டி விட்டு மீதமுள்ள 22 கிமீக்கான காசையும் அந்த இரண்டு கிமீ பயணம் செய்யும் பயணியிடமே வாங்கி விட்டால், அன்றைய செலவுக்கு ஆகி விடுகிறது... அன்றைய தின வேறு செலவுகளுக்கு இன்னொரு பயணி கிடைத்தாலே போதும் என்கிற மனோபாவத்தில் தான் இவர்கள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்...<br />
<br />
இது சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டுபவர்கள்... அதே வாடகை ஆட்டோ ஓட்டுபவர்கள் அந்த ஆட்டோவின் சொந்தக்காரர்களினால் (பெரும்பாலும் காவல் துறை சார்ந்தவர்கள்) இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்... அதனால், இப்படி மக்களிடம் கொள்ளை அடிக்க தூண்டும் மக்களில் சிலரை பிடித்து சூத்தில் சூடு போட்டால் எல்லாம் சரியாகி விடும்... வாழ்க <a href="http://www.meterjam.com/">Meter Jam</a>... வளர்க <a href="http://mightymaverick.blogspot.com/2010/04/blog-post.html">ஆட்டோ மொக்கை பதிவு</a>...<br />
<br />
<b>டிஸ்கி</b>: இது ஒரு மொக்கை பதிவு... அதனால் இந்த பதிவை படித்த பின் சிரித்து விட்டு நல்லதா நாலு பின்னூட்டம் போட்டு போகவும்... அப்படி இல்லாமல் ரொம்ப கலாய்த்தால் மானாட மயிலாட புகழ் கலா அக்கா உங்கள் கனவில் வந்து தொடர்ந்து கலாய்ப்பார் என்கிற சாபம் இருக்கிறது... அதனால எதை செய்தாலும் கேர்புல்லா செய்யணும்...mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-604000788466931522010-11-23T14:29:00.000+05:302010-11-23T14:29:54.494+05:30ஆசுபத்திரியும் காசு பறிப்பும்அடுத்தடுத்து நடந்த இரண்டு விபத்துக்களால் நிச்சயமாக உடலும் உள்ளமும் சோர்ந்து தான் போயிற்று... முதல் விபத்து நடந்த போது வீட்டில் இந்த முறை "குரு பெயர்ச்சி" உனக்கு அவ்வளவாக நன்றாக இல்லை... வண்டி வாகனங்களில் போகும் போது அதிகம் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது... அதனால் நாம் தப்பாக வண்டி ஓட்டாட்டி கூட பிறரது தவறுகளினால் கூட உனக்கு விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்லி இருந்தார்கள்... நானும் "அட இப்படி எல்லாம் நிறைய பேர் அடித்து விடுவார்கள்... இதற்கு முன்னால் சொன்னவற்றில் பலித்தது என்று என்னால் எதையும் நினைவு கூற இயலவில்லை" என்று நினைத்துக்கொண்டேன்... இருப்பினும் இரண்டாவது விபத்துக்கு யாரை குறை கூறுவது என்று தெரியவில்லை...<br />
<br />
ஏனெனில் அன்று காலை நான்கு மணியில் இருந்து மழை... இரண்டாவது முந்திய நாள் பார்க்காத குழி ஒன்று திடீரென்று சாலையில் இருந்தது... மூன்றாவது அந்த குழியை 20 அடி தூரத்திலேயே பார்த்தும் வண்டியை வேகம் குறைக்காமல் நச்சென்று இரண்டு பிரேக்கையும் (முன்னால் இருப்பது டிஸ்க் பிரேக்) அழுத்த 30 கிமீ வேகத்தில் வந்தும் கூட வண்டி நச்சென்று முதல் விபத்தில் அடிபட்ட இடது முழங்காலிலேயே மீண்டும் விழுந்தது... உடனே ஞாபகம் வந்தது அம்மா சொன்ன குரு பெயர்ச்சி தான்... அவர் வீடு பெயர்கிறாரோ இல்லையோ, நம்மளை பேர்த்து பேர்த்து எடுக்கிறாரே என்று தான் தோன்றியது... இருப்ப்பினும் விபத்து நடந்தவுடன் நீர் கொடுத்து காயங்களை கழுவ உதவிய நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்... (பெரும்பாலான வாகன ஓட்டிகள் வண்டியின் வேகத்தை குறைத்து என்ன ஆயிற்று என்று தான் பார்த்தார்கள்... ஒருவர் மட்டுமே வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி, எனது வண்டியையும் ஓரம் கட்டி நிறுத்தினார்... உதவிய மற்றவர்கள் எல்லாம், சாலை தடுப்பானில் நட்டிருந்த செடிகளுக்கு நடுவில் களை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் தாம்...)<br />
<br />
உடனே ஒரு அலுவலக நண்பனுக்கு அலைபேசியில் நடந்த விசயத்தை கூறி, அவனது வண்டியிலேயே வீடு சென்று உடை மாற்றி அவனது மனைவி வேளை பார்க்கும் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சென்றேன்... பெரிய மருத்துவமனை தான்... நன்றாக காசு பிடுங்கி விடுவார்கள் என்று நினைத்தேன்... ஆனால் அண்ணன் என்று சொல்லி நண்பனது மனைவி மருத்துவத்தை இலவசம் ஆக்கி விட்டு, மருந்தும் அவரே காசு போட்டு வாங்கி கொடுத்து விட்டார்... நன்றி சகோதரி...<br />
<br />
என்ன தான் பெரிய ஆசுபத்திரியாக இருந்தாலும் நமக்கு தெரிந்த மருத்துவரிடம் காட்டினால் தான் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து மருந்து சீட்டுக்களையும், x-ray-யும் கடந்த வெள்ளிக்கிழமை ஊருக்கு கிளம்பியபோது எடுத்து சென்றிருந்தேன்... ஆனால் ஊருக்கு போகவும் ஒரு குழப்பம் - மருத்துவரிடம் போகவா வேண்டாமா என்று... ஆயினும் மாலையில் அவரது மருத்துவமனை பக்கமாக வேறு ஒரு வேளை விசயமாக செல்ல வேண்டி இருந்ததினால் அவரையும் பார்த்து விடுவோம் என்று முடிவுடன் ஊரில் இருந்து சுமந்து வந்திருந்த அத்துனை மருத்துவ ரிப்போர்ட்டையும் தூக்கிக்கொண்டே தான் சென்றேன். மாலை ஐந்தரை மணிக்கு மருத்துவமனையில் நுழைந்து மருத்துவரை பார்க்க அனுமதி சீட்டு (token) வாங்கிக்கொண்டேன்... நான் 37-வது ஆள்... நானும் மருத்துவரை பார்த்து விடலாம் என்று காத்திருக்க, நேரமோ கடந்து கொண்டே இருந்தது...<br />
<br />
மருத்துவரை பற்றி சொல்ல மறந்து விட்டேனே... இவரிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு... தன்னிடம் வரும் நோயாளிகளுடன் நன்றாக உரையாடுவார்... அப்படியும் கால் மணி நேரத்தில் இரண்டு நோயாளிகளை பார்த்து விடுவார்... பெரும்பாலும் மருத்துவர்கள் கேள்வி கேட்டு நம்மிடம் பதில் வாங்குவார்கள்... இவர் நம்மை என்ன நடந்தது என்று கேட்டு அதில் இருந்து கேள்விகள் கேட்பார்... அந்த கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கும் போதே நம்மை சோதித்துக்கொண்டிருப்பார்... நாம் பேசி முடிக்கையில் பெரும்பாலும் ஒரு முடிவுக்கும் வந்திருப்பார்... ஆனால் ஒரு கெட்ட பழக்கம், உள்நோயாளியாக இருந்துவிட்டு சென்றவர்கள், பழக்கமானவர்கள் வந்தால், அவர்களிடமும் உரையாடிக்கொண்டே நம்மையும் பரிசோதனை செய்து கொண்டிருப்பார்... வி.ஐ.பி. நோயாளியாக இருந்தால், அரை மணி நேரமாவது வெளியில் இருப்பவர்களுக்கு சோதனையாக இருக்கும்...<br />
<br />
ஆக கடைசியில், நான்கு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் மருத்துவரை சந்தித்து விட்டு பணம் கட்டும் இடத்திற்கு சென்றால், ரூ.150/- பிடுங்கிக்கொண்டார்கள்... அப்போது தான் தெரிந்தது எப்படி இவர் இவ்வளவு பெரிய மருத்துவமனையும், செவிலியர் கல்லூரியும் கட்டினார் என்பது... (மூன்று வருடங்களுக்கு முன்னால், ஒரு வாடகை வீட்டில் வைத்து வைத்தியம் பண்ணிக்கொண்டிருந்தார்) இந்த கொடுமைக்கு, தோட்ட நகரத்திலேயே, முதலில் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவரிடம் சென்று பார்த்திருந்தால் இதை விட குறைந்த செலவில் பார்த்திருக்கலாம்... (இங்கு முதலில் பதிவதற்கு என்று நூறு ரூபாய் பிடுங்குவார்கள்... அதற்கு பின் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற நூறு ரூபாய் தான்)...<br />
<br />
ஆக மக்கா, இதுலேருந்து என்ன சொல்ல வர்றேன்னா, பெரிய ஊரில் தான் மருத்துவமனையில் காசு பிடுங்குவார்கள்; அல்லது பெரிதாக மருத்துவமனை கட்டி வைத்திருப்பவர்கள் தான் காசு பிடுங்குவார்கள் என்பது அல்ல... சின்ன ஊரில், ஏதேனும் மருத்துவ உப துறையில் பட்டம் பெற்று கைராசி மருத்துவர் என்று பெயர் வாங்கி விட்டால், தனியாக மருத்துவமனை கட்டவும், அதனை விரிவாக்கவும் கூட காசு பிடுங்குவார்கள்... அதனால, சரியான மருத்துவமனையை தேர்ந்தெடுத்து மருத்துவம் பாருங்க... இதை ஏன் சொல்லுறேன்னா, மதுரையில வீட்டு பக்கத்தில் ஒரு மருத்துவமனை உண்டு... அங்கு இன்னும் கூட மருத்துவரிடம் ஆலோசனை பெற ரூ.20/- மற்றும் காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற சிறு நோய்களுக்கு ஊசி போட ரூ.10/- தான் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்... ஆனால் அங்கும் கவனிப்பு என்பது மூன்று நட்சத்திர அந்தஸ்துக்கு குறையாத மருத்துவமனைகளில் கிடைக்கும் கவனிப்பை விட குறைவானது இல்லை...<br />
<br />
-<span style="color: blue; font-size: x-small;"><b>மொக்கச்சாமி</b></span>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-55553072077818018172010-11-16T13:02:00.001+05:302010-11-16T13:03:48.146+05:30வினையான தீபாவளி...பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில் ஒரு பதிவு தீபாவளியை பற்றி போட்டதுக்கப்புறம் இப்போ தான் தீபாவளி பற்றி அடுத்ததா எழுத தோணியது... வெளியூரில் பொட்டி தட்டும் என்னைப் போன்ற தென் தமிழகத்து மக்கள் எல்லாம் நிச்சயம் முந்திய ஜென்மத்தில் ரொம்ப பாவம் பண்ணி இருக்கணும்... சொந்த ஊருக்கு போக தொடர்வண்டியில் (train) நிச்சயம் டிக்கெட் கிடைக்காது... கிடைச்சாலும் ஏதேனும் ஏஜென்ட் கிட்ட மட்டுமே இரண்டு மடங்கு மூன்று மடங்கு விலைக்கு கிடைக்கும்...<br />
<br />
சரி... நமக்கு வீட்டுல இருந்து தொடர்வண்டி நிலையம் செல்லும் நேரத்தில் பேருந்து பயணத்தில் ஹோசூரை தாண்டி விடலாம் என்பதால், பேருந்திலேயே முன்பதிவு செய்து விடுவது வழக்கம்... பெரும்பாலும் பேருந்துகளும் நிரம்பி வழியும்... ஆனால் இந்த முறை அதிர்ஷ்டவசமாக சென்று வர பயணச்சீட்டு கிடைத்தது... அதை விட அதிர்ஷ்டமாக நவம்பர் ஒன்றாம் தேதி கர்நாடகா பிறந்த தினமும் வர, 2, 3, 4 மூன்று நாட்கள் அலுவலகத்தில் விடுப்பும் கிடைக்க, அக்டோபர் 29-லேயே ஊருக்கு கிளம்பியாகி விட்டது... நாலு நாள் ஊரில் இருப்பதினால் சில உள்ளூர் வேலைகளையும் முடிக்கலாம் என்று திட்டம் போட்டு கிளம்பினாலும் வேலைகள் உருப்படியாக முடியவில்லை...<br />
<br />
இதற்கிடையில் பேருந்து பயணச்சீட்டு விலையில் வேறு வில்லங்கம்... தங்கை கணவருக்கு தீபாவளி நேரத்தில் அதிகப்பணியினால் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் தான் கிளம்ப முடியும் என்கிற நிலைமை வர, தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு கிடைக்காத காரணத்தினால் கர்நாடக அரசு பேருந்தில் இரண்டு மடங்கு கட்டணம் கொடுத்து (official price) பயணச்சீட்டு வாங்கினோம் (இதைப்பற்றிய <a href="http://mightymaverick.blogspot.com/2010/10/blog-post_13.html">பதிவு</a>)... பின்னர் தான் தெரிந்தது, சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சிதம்பரத்துகாரரின் பேருந்து சேவையிலும் நிறைய தில்லுமுல்லுகள் என்று... அதாவது ஒவ்வொரு பெரிய ஊரிலும் இருக்கும் வட்டார தலைமை அலுவலகத்தில் இருந்து தான் பயணச்சீட்டு ஒதுக்குவார்களாம்... அப்படி ஒதுக்கும்போதே ஒவ்வொரு வண்டியிலும் நாலு சீட்டை வட்டார அலுவலகம் தனக்கென்று ஒதுக்கி வைத்துக்கொண்டு, தீபாவளிக்கு ஒருவாரம் இருக்கும் போது நான்கு ஐந்து மடங்கு விலையில் விற்று விடுகிறார்களாம்...<br />
<br />
இப்படி எல்லாம் திருட்டுத்தனம் பண்ணுகிறார்கள் என்று தான் எந்த பணியாளரையும் ஒரே ஊரில் ஆறு மாதத்திற்கு மேல் அவர்கள் வைத்திருப்பதில்லை... ஆனால் திருமணம் ஆகி அந்த ஊரிலேயே குடித்தனம் நடத்தும் ஒருவர் இருந்து விட்டால் இந்த திருட்டுத்தனத்தை ஒழிக்க முடியாமல் போய் விடுகிறது...<br />
<br />
ஒரு வழியா தீபாவளி தினமும் நெருங்க தீபாவளிக்கு முந்தைய நாளின் ஷாப்பிங் நாம ஊருல பேமஸ் என்பதினால் நானும் நாலாம் தேதி மாலையில் நாலு மணிக்கு கிளம்பி (வண்டி எடுத்துப்போவது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை) பேருந்து பிடித்து கீழவாசலில் இறங்கி பார்த்தால் கூட்டமே இல்லை... என்னடா இது மதுரைக்கு வந்த கொடுமைன்னு பார்த்தால் நிறைய பேர் நாலாம் தேதி மதியமோ மாலையோ தான் கிளம்பி தீபாவளிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று நண்பர்களிடம் இருந்து தகவல்... அதானே பார்த்தேன்... இல்லாட்டி தீபாவளிக்கு முந்திய நாள் அந்த ஏரியாவில் நின்னா நம்மளை அவங்களே நகர்த்தி கூட்டி போய்டுவாங்க... அத்தோட சாயங்காலம் அஞ்சு மணிக்கு அந்த ஏரியாவில இறங்குனா பத்து மணிக்கு முன்னாடி வீடு சேர முடியாது... அவ்வளவு கூட்டம் இருக்கும்... ஆனா இந்த தடவையோ ஒன்பது மணிக்கு வீட்டுல சாப்பாடு ஆயிடுச்சு...<br />
<br />
அப்போ தான் செய்திகளில் பார்த்தால், பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கர்நாடகா அரசு பேருந்து மொத்தமாக எறிந்து சாம்பல் ஆனது... உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கடைசியாக வந்த செய்திகளில் கூறிக் கொண்டிருந்தார்கள்... யாரோ ஒருவர் பட்டாசு வாங்கி வைத்திருந்திருக்கிறார்... எங்கேயோ உள்ளே மின்கலங்களில் உரசல் ஏற்பட, மொத்தமா பத்திக்கிச்சு... நல்ல வேளை. முதல்லேயே கவனிச்சு எல்லாரும் வண்டியை விட்டு இறங்கி பத்திரமா நின்னுக்கிட்டதினால தப்பிச்சுக்கிட்டாங்க...<br />
<br />
சரின்னு தூங்கி எந்திரிச்சு கங்கா ஸ்நானம் எல்லாம் முடிச்சு புத்தாடை உடுத்தி பாட்டி வீட்டுக்கு போய் நின்னா, மாமா பசங்க போட்ட பட்டாசு தெறிச்சு யாரோ ஒருத்தர் மேல பட்டு (10 அடி தள்ளி நின்றிருந்தாராம்) அவர் வந்து சண்டை பிடிச்சுக்கிட்டு இருந்தார்... அவரை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு எல்லா சொந்த பந்தங்களையும் சந்திச்சுட்டு வீடு வந்து சேர்ந்து குட்டியா ஒரு தூக்கம் போட்டு எழுந்து, மதிய சாப்பாடு முடிச்சாச்சு... அட... இது வரை ஒரு பட்டாசு கூட இந்த தீபாவளிக்கு போடலை... அதுக்கு மேலேயும் பட்டாசு போட விருப்பம் இல்ல... அப்பாடா தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு பச்சை தீபாவளி (green diwali) கொண்டாடியாச்சு...<br />
<br />
அந்தா இந்தான்னு இழுத்தடிச்சுக்கிட்டிருந்த ஜல் புயல் வேறு மழையை அங்கே இங்கேன்னு கொட்ட, பெரிதாக பட்டாசு இல்லாத தீபாவளி தான் இந்த முறை பெரும்பாலான ஊர்களில்... இதனால் இந்த முறை தீபாவளி அன்று ஏற்படும் நிறைய பட்டாசு விபத்துக்கள் குறைந்திருந்தன... இல்லாட்டா தீபாவளி முடிஞ்ச மறுநாள் செய்திகளில் எல்லாம் இந்த ஊரில் இத்தனை வீடுகள் பற்றி எரிந்தன; இத்துனை பேர் பட்டாசினால் தீக்காயம் பட்டார்கள் என்று மட்டுமே செய்திகள் வந்து கொண்டிருக்கும்...<br />
<br />
அட நமக்கும் உடையில் ஓட்டை இல்லாத, கை கால்களில் தீக்காயம் இல்லாத தீபாவளியை முடிஞ்சுடுச்சே... பரவாயில்லையே என்று நினைத்து கடந்த ஞாயிறு அன்று ஊருக்கு கிளம்பினால், திங்கட்கிழமை காலை சரியாக நான்கு மணி இருபத்தியேழு நிமிடத்தில், நல்ல தூக்கத்தில் இருக்கும் போது டமார் என்று சத்தம்... பின்னந்தலை எல்லாம் ஒரே வலி... என்னடான்னு பார்த்தா நாம வந்த வண்டி விபத்தில் சிக்கி வண்டியில் கடைசி வரிசை இருக்கையில் இருந்து, கிட்டத்தட்ட பேருந்தின் முன்பகுதிக்கு தூக்கி வீசப்பட்டு கிடந்தேன்... ஐயோ அம்மா என்கிற வலியின் சத்தத்தில் தான் விபத்தின் வீரியம் புரிந்தது... சரி இருட்டுக்குள் ஒன்றும் தெரியாது என்பதால், வண்டியில் விளக்கை போடுங்கன்னு சத்தம் போட்டால் முன்னால் இருந்து ஒரு பதிலும் வரவில்லை... எழுந்து போய் பார்த்தால் ஒட்டுனரையே பார்க்க முடியவில்லை... அந்தளவிற்கு அவர் உள்ளே சிக்கி இருந்தார்... இந்த சத்தத்தில் மயக்கமே வந்து விட்டது... கொஞ்ச நேரம் அரைகுறை மயக்கத்தில் இருந்து விட்டு எழுந்து, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஜன்னல் வழியே வெளியே இறங்கும் போது யாரோ தகவல் சொல்லி, காவல் துறையும், ஆம்புலன்சும் வந்து சேர்ந்தன... நல்ல வேலையாக இடது பக்க மூட்டில் மட்டும் அடி... உள் காயமாக இருந்ததினால், கொஞ்சம் தைரியமாக பேருந்தில் இருந்து மற்றவர்கள் இறங்க காவல் துறையுடன் சேர்ந்து உதவி செய்து விட்டு அரசு மருத்துவமனை சென்று வலி நிவாரணி மருந்து இட்டுக்கொண்டு ஊருக்கு வந்தால், மூட்டில் வலி மீண்டும்...<br />
<br />
நல்ல வேலையாக முன் கூட்டியே வந்து சேர்ந்திருந்த தங்கைக்கு தகவல் சொல்லி இருந்ததினால், அவள் விடுப்பு எடுத்திருந்தாள்... அவளுடன் சென்று மருத்துவமனையில் x-ray எடுத்து களிம்பு தடவி மாத்திரை வாங்கி அன்றைய நாள் முழுவதும் ஓய்வு எடுத்ததினால், சற்றே தெம்பாகி விட்டது... ஒரு வழியாக விபத்தினால் ஏற்பட்ட மன ரீதியான அழுத்தத்தில் இருந்தும் விடுபட்டாகி விட்டது...<br />
<br />
இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டேன் என்றால், நமக்கு தீபாவளிக்கு சட்டையில் ஓட்டை விழுந்தால் கூட சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்... ஏன்னா பண்டிகை நல்லவிதமாக முடிந்து பின்னாடி இப்படி ஒரு ஆப்பு வருதுன்னா யார் தான் சந்தோசப்படுவார்கள்... ஆக எந்த வருடமும் இல்லாத புது மாதிரியாய் ஒரு வழியாக இந்த தீபாவளி முடிஞ்சுடுச்சு...<br />
<br />
அதனால மக்களே.... மிகவும் தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள்... <br />
<br />
-<span style="font-size: x-small;"><b style="color: blue;">மொக்கச்சாமி</b></span>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-78526218605576521272010-11-11T14:56:00.001+05:302010-11-11T14:58:34.007+05:30என் அருமைக் காதலிக்கு...<div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: small;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq6ac_TnKNZcNxdPTcVs6JybpfDzyDywfIDZFAXsE6bQMii9pHz8VVr-wjzEgq-td1gDXDrmQq7N89SC412ImfFyPqkh2vnsufVEo1rApIYo9r-NNCPemQBDdoOAuN0iIogjRLR-Yh9td1/s1600/Blue-eyes2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq6ac_TnKNZcNxdPTcVs6JybpfDzyDywfIDZFAXsE6bQMii9pHz8VVr-wjzEgq-td1gDXDrmQq7N89SC412ImfFyPqkh2vnsufVEo1rApIYo9r-NNCPemQBDdoOAuN0iIogjRLR-Yh9td1/s200/Blue-eyes2.jpg" width="200" /></a></span></div><span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">உறக்கமில்லா</span><br />
<span style="font-size: small;">இரவுகளின்</span><br />
<span style="font-size: small;">இரக்கமில்லா கனவுகளில்</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">சிறுபிம்பமாய் </span><br />
<span style="font-size: small;">குறுநகையுடன் நீ</span><br />
<span style="font-size: small;">பரிதவிப்புடன் நான்</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">நித்திரை கூட</span><br />
<span style="font-size: small;">நினது வரமே...</span><br />
<span style="font-size: small;">=========================</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: small;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0lJ8sD1LsE6zlCPh5xOX81rnnHRta8atgSbHReEZGBHNDTeH94GWRkzxMbLa_HBdIoZ2ghPKRCsoitCHFiRm9SNACEaJUZVmo1A6egWwf2KljHFRH8zinGUqkvuSpsydwTcdGTuhFilnS/s1600/630232.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="144" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0lJ8sD1LsE6zlCPh5xOX81rnnHRta8atgSbHReEZGBHNDTeH94GWRkzxMbLa_HBdIoZ2ghPKRCsoitCHFiRm9SNACEaJUZVmo1A6egWwf2KljHFRH8zinGUqkvuSpsydwTcdGTuhFilnS/s200/630232.jpeg" width="200" /></a></span></div><span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">காலையில் கண் </span><br />
<span style="font-size: small;">விழித்தவுடன் கடவுளை</span><br />
<span style="font-size: small;">தொழுதல் நலம் என்றாள் அம்மா</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">எஞ்சாமி உனைத்தொழ</span><br />
<span style="font-size: small;">ஏங்கி இன்னும் உள்ளே</span><br />
<span style="font-size: small;">உறங்கிக் கிடக்கிறது</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">உனக்காக வாங்கிய</span><br />
<span style="font-size: small;">வண்ண தொலைக்காட்சிப்பெட்டி...</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: x-small;"><b style="color: blue;">-மொக்கச்சாமி </b></span><br />
<span style="font-size: small;"><br />
</span>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-31109347564365625022010-10-25T17:32:00.001+05:302010-10-25T17:34:50.467+05:30நீங்க நாசமாப் போகோணும் நாடு முன்னேற... Iசில தினங்களுக்கு முன்னால் செய்திகளில் அடிபட்ட இரண்டு விஷயங்கள் - அயோத்தி பிரச்சினைக்கான நீதிமன்ற தீர்ப்பும், விடுதலைப்புலிகளுக்கான தடை நீட்டிப்பும்... முதல் பிரச்சினையை தேசீய அளவில் எல்லோரும் பேசினார்கள்... இரண்டாவதை தமிழக அளவில் சிலர் பேசினார்கள்... பேசியவர்களும் தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவே பேசினார்கள்... இவர்கள் எல்லாம் நல்லாயிருந்து என்ன சாதிக்கப்போகிறார்கள்?<br />
<br />
என்னோட கேள்வி இது தான்... ராமர் பிறந்த இடம் என்று ஒன்றை கூறி அதனை மீட்க யாரோ ஒரு பக்தன் நீதிமன்றத்தை நாடினால், அந்த இடத்தை மீட்க ராமனின் வாரிசுகள் தான் வரவேண்டும் என்று சொல்லாத நீதிமன்றம், விடுதலைப்புலிகளின் அமைப்பை தடை செய்யக்கூடாது என்று சொல்ல விடுதலைப்புலிகளின் அமைப்பை சார்ந்த ஒருவர் தான் வர வேண்டும் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்? இதை ஏன் வைகோவும் பழ.நெடுமாறனும் கேட்க வில்லை? இல்லாத ஒருவருக்காக இருக்கின்ற ஒருவர் வாதாட முடியுமெனில் இருக்கின்ற அமைப்புக்காக அதனை ஆதரிக்கின்ற ஒருவர் ஏன் வாதாடக்கூடாது?<br />
<br />
அப்படி தடை செய்ய வேண்டுமெனில் முதலில் இந்த தடையை கொண்டு வந்த காங்கிரசை அல்லவா தடை செய்திருக்க வேண்டும்... அவர்களது தலைவி அம்மையார் இந்திரா காந்தி அல்லவா 1983-இல் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதமும் ஆயுதப்பயிற்சியும் தந்தார்... அப்படியெனில் இவர்கள் வளர்த்து விட்ட அமைப்பை தடை செய்ய வேண்டுமெனில், இவர்களையும் அல்லவா தடை செய்ய வேண்டும்? அதை ஏன் யாரும் கேட்கவில்லை?<br />
<br />
பின்னர், தமிழகத்தில் ஆயுத பயிற்சிக்கு இடம் ஒதுக்கியவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த அந்நாளைய முதல்வர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன்... ஆக இது ஒரு தார்மீக ஆதரவு என்பதினால் இந்த அமைப்பையும் அல்லவா தடை செய்திருக்க வேண்டும்? ஆனால் இந்த காங்கிரஸ் அரசோ இவர்களுடன் இப்போதைக்கு கூட்டணி வைப்பதா அல்லது இப்போதிருக்கும் கூட்டணியையே தொடர்வதா என்று அல்லவா யோசித்துக் கொண்டிருக்கிறது?<br />
<br />
இந்த காங்கிரசின் கனவு நாயகனான ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது கைதான தற்போதைய தமிழகத்தின் முதல்வர்; விடுதலைப்புலிகளுக்கு நன்றாக தீனி போட்டவர்; திருவாளர் கலைஞரின் அமைப்பான திராவிட முன்னேற்றக் கழகமும் தடை செய்யப்பட்டிருக்க வேண்டாமோ? இதை எல்லாம் செய்ய வில்லை இந்த தடை விதிக்கும் கமிசன்... <br />
<br />
ஆனால் இலங்கையில் மீதம் இருக்கும் தமிழன் செத்தானா இருக்கின்றானா என்று கூட பார்க்காமல், அவர்களை கொலை செய்யும் ராஜபக்ஷேவை காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவிற்கு அழைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்... இதென்ன கொடுமை சார்... தனக்கு சொந்தமான நிலத்தில் அடிமையாய் சாகின்ற ஒரு இனத்தை கைகட்டி வாய் பொத்தி அந்த இனத்தை சேர்ந்தவர்களான நாமே பார்த்துக்கொண்டிருக்கிறோமே... இது எந்த இனத்திற்கும் நடக்காத கொடுமை... அது எப்படி இலங்கை தமிழர்களுக்கு சொந்தமானது என்று கேட்கிறீர்களா? சொல்லுறேன்...<br />
<br />
ராமாயணத்தில் வரும் இலங்கையை ஆண்ட மன்னன் பெயர் - ராவணன். அவன் தமிழன்... அவன் தமிழன் என்றால் சிங்களவர்கள் இடையில் தான் குடி வந்தார்கள் என்று அர்த்தம் ஆகி விடுகிறது அல்லவா? அப்படியெனில் மண்ணின் மைந்தர்களைக் கொன்று அவர்களது ரத்தம் குடித்து வாழும் ஒரு இனம் அல்லவா சிங்கள இனம்? யாரேனும் இதனை மறுத்தால், ராமாயணமும் பொய் என்று அல்லவா அர்த்தம். ராமாயணம் பொய் எனில் ராமன் என்பவன் பொய் அல்லவா? ராமன் என்பவன் பொய் எனில் அவன் பிறந்த இடம் என்பது அயோத்தி என்பது பொய் அல்லவா?<br />
<br />
ஆக இந்த மாதிரி பொய்யினை மக்கள் மீது திணிக்கும் இவர்கள் அனைவரும் நாசமாய் போனால் தானே நாடு முன்னேறும்... இதை படிக்கிற மக்களே நீங்களே சொல்லுங்க...<br />
<br />
<strong><span style="color: blue;"> - மொக்கச்சாமி</span></strong>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-37305724016879522862010-10-13T13:33:00.000+05:302010-10-13T13:33:26.579+05:30வியாபாரம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள் அரசு நிறுவனங்களே...நேற்று மாலை என் தங்கைக்கு தீபாவளிக்கு முந்திய நாள் பயணத்திற்காக பயணச்சீட்டு எடுக்க கர்நாடக அரசு பேருந்து முன்பதிவு மையத்திற்கு சென்றிருந்தேன்... இவர்கள் நகரங்களுக்கு இடையில் நான்கு வகையான பேருந்துகளை இயக்குகிறார்கள்... சாதாரண பேருந்திற்கு ராஜஹம்சா (அன்னம்), வால்வோ (volvo) வகை பெருந்துக்களுக்கு ஐராவதம், இடைப்பட்ட வாகனத்திற்கு அம்பாரி என்று பெயர் சூட்டி நன்றாக பராமரிப்பும் செய்கிறார்கள்... இதில் அம்பாரி வகை சேவையில் மட்டுமே இடம் இருந்ததினால் பயண சீட்டு முன்பதிவு செய்தேன்... ஒரு இருக்கைக்கான பயணசீட்டின் விலை ரூ.900/-. அம்மாடியோவ்... சாதாரண நாளில் ரூ.500/-க்கு விற்கும் ஒரு பயண சீட்டின் விலையை பண்டிகை காலத்தில் 80% அதிக விலைக்கு விற்கிறார்கள்... இந்த பயண சீட்டின் விலை அய்யா நடராசனின் பேருந்து சேவையில் இருக்கும் மல்டி-அக்சில் பேருந்தின் பயண கட்டணத்தை விட 30% அதிகம்... அப்படியெனில் இந்த கர்நாடக அரசு நிறுவனம் எவ்வளவு லாபம் சம்பாதிக்கும் என்று பாருங்கள்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6Bf0Hy1EwZALPi_ju6VpbKF79w_UvCBLIz9uR1S90BauXF5LqBeaAc3uLfSeA9svlGuRep1IGForiiNAbOCoQ15qXBtvbcAtRclpvpB05MMTDS9EVIVwdosJTij5tLuAra2Zspbr6SnEC/s1600/3358880539_45b308ceb4_m.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ex="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6Bf0Hy1EwZALPi_ju6VpbKF79w_UvCBLIz9uR1S90BauXF5LqBeaAc3uLfSeA9svlGuRep1IGForiiNAbOCoQ15qXBtvbcAtRclpvpB05MMTDS9EVIVwdosJTij5tLuAra2Zspbr6SnEC/s1600/3358880539_45b308ceb4_m.jpg" /></a></div>இது போன்ற ஒரு வியாபார தந்திரம் ஏன் தமிழக பேருந்து சேவை நிறுவனத்திற்கு வரவில்லை? அல்லது வந்தாலும் அவர்கள் கூட்டம் சேராது என்று பயந்து கொண்டு விற்க வில்லையா? கடந்த முறையும் தீபாவளி முடிந்து கிளம்பும் போது இப்படி தான் ஆகி விட்டது... கடைசி நேரத்தில் KSRTC-இல் தான் பதிவு செய்ய வேண்டியதாகி விட்டது. அவர்கள் மதுரைக்கும் அருப்புக்கோட்டைக்கும் இடையில் ஓடும் பேருந்து போல ஒரு பேருந்தை காட்டி இதில் தான் இடம் இருக்கிறது... பயணச்சீட்டு விலை ரூ.450/- என்றார்கள்... வேறு வழி இல்லாமல் அந்த வண்டியில் இரண்டு குண்டான நபர்களுக்கு நடுவில் எந்தப்பக்கமும் சாய முடியாமல், கால் முட்டி வலியோடு வந்து சேர்ந்தேன்.<br />
<br />
இது மட்டுமல்ல... பெங்களூருவில் வால்வோ வகை நகரப்பேருந்துகளை அறிமுகப்படுத்திய போது, கூட்டம் அதிகம் சேரவில்லை என்று அந்த பேருந்துகளை சாதாரண பேருந்து கட்டணத்தில் ஒட்டினார்கள்... இன்றோ இந்த வகை பேருந்தில் ஏறவே இடம் இருப்பதில்லை... மேலும் இன்று கூட சனி ஞாயிறுகளில் பயணம் செய்தால் 10% குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள்... அதனால் வால்வோ வகை பேருந்துகள் பெரும்பாலான நேரங்களில் நிரம்பியே ஓடுகிறது... ஆனால் நம்ம ஊரில் பாருங்கள்... டாடாவிடம் இருந்து வாங்கிய மார்கோபோலோ தாழ்தள பேருந்துக்களை நகரப்பேருந்துகளாக இயக்காமல் நகரங்களுக்கு இடையிலான பேருந்துகளாக ஓட்டுகிறார்கள்... அந்த பேருந்தினில் பயணம் செய்தால் நிச்சயமாக மூல வியாதி வரும்... அந்த இருக்கைகள் நகர பயணத்திற்காகவே வடிவமைக்கப்பட்டதால் வெப்பம் ஈர்க்கும் தன்மையை சோதிக்காமல் விட்டு விட்டார்கள்... அதையே ஐந்தில் இருந்து ஆறு மணி நேர பயணத்திற்கு பயன்படுத்தினால் அந்த பேருந்து இருக்கை நம் உடல் சூடு, வெளிப்புற சூடு என எல்லா சூட்டினையும் தன்னுள் இழுத்துக்கொண்டு நம் இருக்கையையும் பதம் பார்த்து விடும்... அப்புறம் ஏன் மூல வியாதி வராது?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWkNasggXCskdykdErEnT6XinMIi6m0hOJA9iihofG4ftYVgq8fR5srChORnLfCNOSpZhOZ4szpfHQltpfDux81JSfyRhxYzABfy9Dzz5neB8fw-cGljblj5_GH_XKXmU-wELPwGQwAzI2/s1600/Sect_fleets_jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ex="true" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWkNasggXCskdykdErEnT6XinMIi6m0hOJA9iihofG4ftYVgq8fR5srChORnLfCNOSpZhOZ4szpfHQltpfDux81JSfyRhxYzABfy9Dzz5neB8fw-cGljblj5_GH_XKXmU-wELPwGQwAzI2/s320/Sect_fleets_jpg.jpg" width="320" /></a></div>இத்தோடு விட்டானுங்களா? தமிழக அரசு இயக்கும் குளிரூட்டப்பட்ட சூப்பர் டீலக்ஸ் வண்டிகளிலேயே மூட்டைப்பூச்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டியும் அதை சரி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை... அப்படி இருக்கும் போது எப்படி அய்யா உங்கள் சேவையை மக்கள் பயன்படுத்துவார்கள்... என் நண்பருக்கு கூட கர்நாடக அரசு பேருந்தில் இப்படி மூட்டைப்பூச்சி கொடுமை நடந்தது... ஆனால் அவரும் இன்னும் சிலரும் குறை கூறியவுடன் அடுத்த பணிமனையில் அந்த வண்டியை நிறுத்திவிட்டு மாற்று வண்டியை ஏற்பாடு செய்து அந்த பேருந்தில் இருந்த பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தார்கள்... இதே தமிழ்நாடாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள்... நடத்துனரும் ஓட்டுனரும் சேர்ந்து "சும்மா மூடிக்கிட்டு உட்காருயா... பெருசா குறை சொல்ல வந்துட்டாரு... அது ரெண்டு சொட்டு ரெத்தம் குடிக்கிறதுனால என்ன குறைஞ்சு போயிட்ட... அப்படி இந்த வண்டியில் வர இஷ்டம் இல்லாட்டி இங்கேயே இறங்கிக்கோ... இல்லாட்டி மூடிக்கிட்டு தூங்கு" என்று சொல்லி ஏதேனும் ஒரு அத்துவானக்காட்டில் இறக்கி விட்டு சென்று இருப்பார்கள்... அல்லது நம் மானத்தை வாங்கி விட்டு அந்த வண்டியிலேயே பயணம் செய்ய வைத்திருப்பார்கள்... நம் மானம் போகக்கூடாது என்று பெரும்பாலும் யாரும் குறை சொல்லுவதில்லை...<br />
<br />
இதில் இவர்களுக்கு ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கான அத்துனை சலுகைகளும் வேண்டும் என்று அவ்வப்போது போராட்டம் வேறு... தூ... வெக்கமாய் இல்லையா? நீங்கல்லாம் எப்போடா திருந்துவீங்க... பக்கத்து மாநிலத்தில் நல்ல லாபத்தில் இயங்கும் சில அரசு நிறுவனங்களை பார்த்து கொஞ்சமாவது திருந்தினால் மட்டுமே நீங்களும் நஷ்டம் அடையாமல் இருக்க முடியும்... இல்லாட்டி குறைஞ்சபட்சம் நஷ்டத்தில் இயங்கும் அரசு பேருந்துகளை தனியாருக்கு விட்டுக்கொடுத்துட்டு மூடிக்கிட்டு போகலாம்... கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் நல்ல பயணம் எங்களுக்கு கிடைக்கும்...<br />
<br />
-<strong><span style="color: blue;">மொக்கச்சாமி</span></strong>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2980394474938662909.post-85959442148070561002010-10-11T17:35:00.002+05:302010-10-22T12:54:03.193+05:30சாமீஈஈஈ... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...நேத்து தான் ராமேஸ்வரத்தில் இருந்து திரும்பி வந்தேன்... வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு தோட்ட நகரத்தில் இருந்து கிளம்பி கோயில் மாநகராம் எம் சொந்த ஊருக்கு சென்று இறங்கி உடனே வண்டி ஏறி நன்றாக ஊர் சுற்றி விட்டு ராமேஸ்வரத்தில் முடிக்க வேண்டிய கடமைகளை முடித்து விட்டு மீண்டும் கூடல் மாநகர் வந்து தோட்ட நகரத்திற்கு பேருந்து ஏறி.... அப்பப்பா... நல்ல களைப்பு... ஆனாலும் காலையில் குளிக்கும்போது சில கேள்விகள் மண்டையில் குடைச்சல் கொடுத்ததால், பயண அலுப்பு பறந்தோடிப் போச்சு... என்னாடா கேள்விங்கிறீன்களா... கேக்குறேன்...<br />
<br />
ராமேஸ்வரத்தில் கடைசியாய் போனது ராமர் பாதம்... அதாவது அந்த இடத்தில் இருந்து தான் ராமர் இலங்கையை முதன்முதலில் பார்த்தார்... அப்படித்தான் அங்கே உள்ள பூசாரி சொல்லுறார்... அந்த பாதத்தை சுற்றி வந்து பாருங்கோன்னும் சொன்னார்... அப்படி சுற்றி வந்ததினால் தான் வினையே... மண்டையை குடையும் கேள்விகள்... அத்தோட அய்யா கலைஞர் வேறு 17 லட்சம் ஆண்டுகள் முன்னால் வாழ்ந்த ராமர் பிறந்த இடத்தையே கண்டுபிடித்து விட்டார்கள்; ஆனால் 1000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்து மறைந்த ராஜராஜ சோழனின் கல்லறையை கண்டுபிடிக்க வழி இல்லை என்கிறார்களே என்று வேறு ஆதங்கப்பட்டாரே (அட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளையே கண்டுபிடிக்க துப்பு இல்லாதவர்கள் எப்படி அய்யா அரசியல் நாகரீகம் கற்று கொடுத்த ஒரு மன்னனின் கல்லறையை கண்டுபிடிப்பார்கள்)... அதுவேறு கொஞ்சம் நமநமன்னு அரிச்சுகிட்டே இருந்துச்சு... அதனால நான் என் கேள்வியை எல்லாம் கேட்டுப்புடுறேன்...<br />
<br />
ராமர் பாதம் பதிந்த இடம் சற்று மேடாக இருந்தது... நானும் வேறு கோயில்களில் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் பாதம் பதிந்த இடம் குழிவாக இருக்கும்... அதாவது உங்க வீட்டுல தோட்டம் இருந்துச்சுனாலோ, நீங்கள் கடற்கரை உள்ள நகரத்தில் வசிப்பவராகவோ இருந்தால், மண்ணில் சென்று நின்று பாருங்கள்... அந்த மண் உங்கள் பாத அச்சினை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும்... அந்த இடம் குழிவாக இருக்கும்... ஆனால் ராமர் பாதமோ அப்படியே உல்டா... மேடாக இருந்தது... அப்படியெனில் ராமர் பாதம் என்பது பொய்யா?<br />
<br />
சரி... நிறைய பேருக்கு இடிக்கும்... நிறைய பேருக்கு மூக்கு மேல் புசுபுசுன்னு கோபம் வரும்... ஆனாலும் அடுத்த கேள்வி... என்னோட உயரம் ஆறு அடி... ராமர் பாதம் இருந்த இடத்தில் மேலே ஒரு சிறு மண்டபம் (அதாவது ராமர் பாதம் இருக்கும் இடத்திற்கு மேல் யாரும் நின்று பார்க்கக்கூடாது என்று அந்த மண்டபத்தின் உயரமான பத்து அடிக்கு மேல் உள்ள கூரையில் இன்னொரு மண்டபம்). அந்த மண்டபத்தின் பக்கத்தில் இருந்து பார்த்த போது அடுத்த ஊரான முகுந்தராயர் சத்திரமே (இங்கிருந்து தான் தனுஷ்கோடிக்கு வண்டி ஏற வேண்டும்) தெரிய வில்லை (அதாவது 10+6; பதினாறு அடி மொத்த கணக்கு; மிக நன்றாக தெரிந்த இரண்டு - ராமநாத சாமி கோயில் கோபுரமும் தூர்தர்சன் கோபுரமும் தான்.); ஆனால் ராமருக்கு இலங்கையே தெரிந்ததாம்... இதென்னடா கொடுமை?<br />
<br />
சரி அவருக்கு தெரிந்தது என்றே வைத்துக்கொள்வோம்... அப்படியெனில் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் என்ன? <br />
<br />
அவர் அந்த பகுதியில் ஒரு சிறு குன்று மீது ஏறி நின்று பார்த்தார் எனில் அந்த பகுதியில் மேலும் பல சிறு குன்றுகள் இருந்திருக்க வேண்டும்... ஆனால் செல்லும் வழியான பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி என்று எந்த ஊரிலும் குன்றுகளே இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி ராமேஸ்வரத்தில் மட்டும் குன்றுகள் இருந்தன?<br />
<br />
சரி. குன்றுகள் இருந்தன என்றே வைத்துக்கொள்வோம்... அந்த குன்றுகளை உடைத்து தான் அவர்கள் "ராம்... ராம்..." என்று எழுதி கடலில் பாலம் கட்டினார்கள் என்றே வைத்துக்கொள்வோம்... அந்த பாறைகளுக்கு மிதக்கும் தன்மை உண்டெனில் அந்த பாறைகள் நிச்சயமாக கடலில் மிதந்து வேறு பகுதிகளுக்கும் சென்றிருக்க வேண்டும்... ஆனால் அந்த பாறைகள் போன்ற பாறைகளை உலகில் எந்த பகுதியிலும் காண முடிய வில்லையே... அது ஏன்?<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtQ-YbsPcNwKDrDkd4vkdy16BWR6Ky8LCUmUKEKnIB4GsgBDkGBh7bzaXIslIGOUs8KkZNAtm6zo901EPScU_HPSXpWALnQQRSsn2_n5SGbTERU0Gm715PHGH9k5_0QPJqhvhQGmFcHXvV/s1600/Map2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ex="true" height="275" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtQ-YbsPcNwKDrDkd4vkdy16BWR6Ky8LCUmUKEKnIB4GsgBDkGBh7bzaXIslIGOUs8KkZNAtm6zo901EPScU_HPSXpWALnQQRSsn2_n5SGbTERU0Gm715PHGH9k5_0QPJqhvhQGmFcHXvV/s320/Map2.png" width="320" /></a></div>அடுத்த கேள்வி... அவர்கள் இலக்கு இலங்கை... அப்படியெனில் நேராக ஒரு பாலம் அதுவும் ஒரே அகலத்தில் கட்டி இருக்க வேண்டாமோ? அது ஏன் சில இடங்களில் வளைந்தும், சில இடங்களில் குறுகியும் சில இடங்களில் விரிந்தும் காணப்படுகிறது? படை நடத்திச் செல்லும் போது ஒழுங்கு என்பது மிக முக்கியம்... ஒழுங்கு கலைந்தால் நிச்சயம் பிரச்சினைகள் தான்... அப்படி இருக்கும் போது குறுகலான இடங்களில் படையினர் பின்தங்குவார்கள் அல்லவா? அது ஏன் இப்படி கட்டினார்கள்?<br />
<br />
சரி... பால கதையை விட்டு விடுவோம்... பாத கதைக்கே வருவோம்... ராமர் குன்றின் மேல் நின்று பார்த்தார் எனில் அந்த குன்றின் உயரம் என்ன? அது ராமேஸ்வரத்திலோ ராமாயணத்திலோ எங்குமே குறிப்பிடப்படவில்லை... அத்தோடு ராமர் பாதம் இருக்கும் இடத்தில் இருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்கு மண்ணும், முள்காடும் தான் இன்று தெரிகிறது... அத்தோடு இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கடைசி எல்லையான தனுஷ்கோடியில் இருந்து இலங்கை பத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரம்... ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினைந்து கிலோமீட்டர் தூரம்... ஆக மொத்தத்தில் முப்பது கிலோமீட்டர் தூரம்... ஆக முப்பது கிலோமீட்டர் தூரம்... ராமர் பாதம் ராமேஸ்வரம் கடல் எல்லையில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம்... அப்படியெனில் 32 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இலங்கையை பார்க்க வேண்டுமெனில் அவர் நிச்சயமாக கொடைக்கானல் மலை உயரத்திற்காவது உள்ள ஒரு மலையில் ஏறி நின்று பார்த்திருக்க வேண்டும்... ஆனால், மதுரையில் இருந்து தென் கிழக்கில் சென்றால், இது போன்ற ஒரு உயரத்தில் ஒரு மலையை எங்கும் பார்க்க முடியாது... அப்படி இருக்கும் பட்சத்தில் ராமரின் உயரம் எவ்வளவு... ஒரு 60 - 70 அடி? அப்படியெனில் ராமர் எவ்வளவு பெரிய அசுர தோற்றம் பெற்றிருக்க வேண்டும்... அப்படிப்பட்ட அசுர உயரம் உள்ள மனிதருக்கு எவ்வளவு பெரிய பாதங்கள் இருந்திருக்க வேண்டும்... ஒரு 5 அடி நீளமும், 3 அடி அகலமும் உள்ள பாதங்கள் இருந்திருக்க வேண்டும்... அப்படிப்பட்ட ஒருவர் ஏறி நிற்கும்போது நிச்சயமாக ராமர் பாலம் என்று அழைக்கப்படுகிற ராம் சேது எந்தளவிற்கு ஆடி இருக்க வேண்டும்? அதில் எத்துனை உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கும்?<br />
<br />
தன் மனைவியை மீட்டெடுக்க தனக்கு சொந்தமில்லாத ஒரு சேனையை கொண்டு சென்று பல உயிர்களை பலி கொண்ட ஒருவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?<br />
<br />
அப்புறம் ஒரு கடைசி கேள்வி... சிவனின் திருவிளையாடல்களில் எங்குமே அவர் அசுர உயரம் கொண்ட ஒரு மனிதப்பிறவியாக அவதாரம் எடுத்ததில்லை... அவர் மிக சாதாரணமான ஒரு மனிதராகவே அவதாரம் எடுத்திருக்கிறார்... பெரும்பாலான திருவிளையாடல்களில் அவர் யாரையும் கொன்றதில்லை... அவரை அழிக்கும் கடவுள் என்கிறோம்... ஆனால் காக்கும் கடவுளான விஷ்ணுவோ அவர் எடுத்த பெரும்பாலான (ராம, கிருஷ்ண, நரசிம்ம, மோகினி, வாமன, வராஹ, பரசுராம, பலராம) அவதாரங்களில் யாரையேனும் கொன்றிருக்கிறார்... இன்றைய தேதிக்கு சொல்லப்போனால், விஷ்ணு என்பவர் போலீஸ் (இவருக்கு குற்றவாளிகளை பிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்தும் பணி மட்டுமே); சிவன் என்பவர் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் (இவர் தப்பை கண்டால் போட்டு தள்ளும் அதிகாரம் உள்ளவராக சித்தரிக்கப்படுகிறார்...); ஆனால் விஷ்ணு செய்ததோ என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வேலையை; சிவன் செய்தது சாதாரண போலீஸ் வேலையை... அப்புறம் எப்படி நாம் காக்கும் கடவுளையும் அழிக்கும் கடவுளையும் மாற்றி வைத்திருக்கிறோம்...<br />
<br />
அப்புறம் காக்கும் கடவுள், பாற்கடலில், பாம்பு அரியணையில் எப்போதும் பள்ளி கொண்டிருக்கிறார் (தூங்கிக்கொண்டே இருக்கிறார்; கடல் என்பது நில மட்டத்திற்கு கீழ் இருப்பது). ஆனால் அழிக்கும் கடவுளோ மிக உயரமான இமயமலையில் இருந்து கொண்டு யோகா செய்கிறார்... இப்படி தூங்கிக்கொண்டு இருக்கும் கடவுளுக்கு நாம் six pack abs வைத்து கொண்டாடுகிறோம் (சொல்லப்போனால் இவருக்கு இன்றைய போலீஸ்காரர்கள் போல பெருத்த தொந்தி அல்லவா இருக்க வேண்டும்)... ஆனால் யோகா செய்யும் கடவுளை பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி வெடவெடவென இருக்கிறார்... என்ன கொடுமை சார் இது... <br />
<br />
<strong><span style="color: blue;">- மொக்கச்சாமி</span></strong>mightymaverickhttp://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com0